ஹதீஸ்கள்
#6187
ஸஹீஹ் அல்-புகாரீ - Ethics
ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது: எங்களில் ஒருவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு அவர் ‘காசிம்’ என்று பெயர் சூட்டினார். அப்போது மக்கள் “நாங்கள் நபி (ஸல்) அவர்களிடம் (இது குறித்துத் தீர்ப்பு) கேட்காத வரை (குழந்தையின் தந்தையான) அவரை, ‘அபுல் காசிம் (காசிமின் தந்தை) என்ற குறிப்புப் பெயரால் அழைக்கமாட்டோம்” என்று கூறினர். (அவ்வாறே நாங்கள் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டோம்.) அப்போது நபி (ஸல்) அவர்கள், “என் பெயரைச் சூட்டிக்கொள்ளுங்கள்; ஆனால், எனது (‘அபுல்காசிம்’ எனும்) குறிப்புப் பெயரை நீங்கள் சூட்டிக்கொள்ளாதீர்கள்” என்று கூறினார்கள். அத்தியாயம் :
حدثنا مسدد، حدثنا خالد، حدثنا حصين، عن سالم، عن جابر رضى الله عنه قال ولد لرجل منا غلام فسماه القاسم فقالوا لا نكنيه حتى نسال النبي صلى الله عليه وسلم فقال " سموا باسمي، ولا تكتنوا بكنيتي
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Ethics
- Hadith Index
- #6187
- Book Index
- 211
Grades
- -
