ஹதீஸ்கள்
#6185
ஸஹீஹ் அல்-புகாரீ - Ethics
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: நானும் அபூதல்ஹா (ரலி) அவர்களும் நபி (ஸல்) அவர்களுடன் (கைபரிலிருந்து மதீனாவை) முன்னோக்கிச் சென்றுகொண்டிருந்தோம். நபி (ஸல்) அவர்கள் தம்முடனிருந்த (தம் துணைவியாரான) ஸஃபிய்யா (ரலி) அவர்களைத் தமது வாகனத்தில் பின்னால் அமர்த்தியிருந்தார்கள். (சிறிது தூரம் கடந்து) பாதையில் ஓரிடத்தில் நாங்கள் சென்றுகொண்டிருந்தபோது (நபியவர்களின்) அந்த ஒட்டகம் இடறி விழுந்தது. நபி (ஸல்) அவர்களும் அவர்களின் துணைவியாரும் கீழே தள்ளப்பட்டனர். அபூதல்ஹா (ரலி) அவர்கள் தமது ஒட்டகத்திலிருந்து தாவிக் குதித்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் நபியே! என்னை அல்லாஹ் தங்களுக்கு அர்ப்பணமாக்குவானாக! தங்களுக்கு (காயம்) ஏதும் ஏற்பட்டதா?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், “இல்லை; ஆயினும், நீ இந்தப் பெண்ணைக் கவனி!” என்று கூறினார்கள். உடனே அபூதல்ஹா (ரலி) அவர்கள் தமது துணியைத் தமது முகத்தில் போட்டு (மூடி)க்கொண்டு (அன்னை) ஸஃபிய்யா (ரலி) அவர்கள் இருந்த திசையை நோக்கி நடந்து சென்று அவர்கள்மீது அத்துணியைப் போட்டார்கள். உடனே அப்பெண்மணி (ஸஃபிய்யா -ரலி) எழுந்துகொண்டார்கள். பிறகு அபூதல்ஹா (ரலி) அவர்கள் (நபி (ஸல்) மற்றும் அன்னை ஸஃபிய்யா (ரலி) ஆகிய) அவர்கள் இருவருக்காகவும் அவர்களின் சிவிகையைக் கட்டி (சீராக்கி)னார்கள். அவர்கள் இருவரும் அதில் ஏறிக்கொண்டனர். பிறகு நாங்கள் அனைவரும் பயணமாகி ‘மதீனாவின் புறநகர் பகுதிக்கு வந்தபோது’ அல்லது ‘மதீனாவை நெருங்கியபோது’ நபி (ஸல்) அவர்கள், “பாவமன்னிப்புக் கோரி மீண்டவர்களாக, எங்கள் இறைவனுக்குப் பணிந்தவர்களாக, (அவனைப் போற்றிப்) புகழ்ந்தவர்களாக (நாங்கள் திரும்பிக்கொண்டிருக்கின்றோம்)” என்று கூறினார்கள். மதீனாவிற்குள் நுழையும்வரை இவ்வாறு கூறிக்கொண்டே யிருந்தார்கள்.210 அத்தியாயம் :
حدثنا علي بن عبد الله، حدثنا بشر بن المفضل، حدثنا يحيى بن ابي اسحاق، عن انس بن مالك، انه اقبل هو وابو طلحة مع النبي صلى الله عليه وسلم ومع النبي صلى الله عليه وسلم صفية، مردفها على راحلته، فلما كانوا ببعض الطريق عثرت الناقة، فصرع النبي صلى الله عليه وسلم والمراة، وان ابا طلحة قال احسب اقتحم عن بعيره، فاتى رسول الله صلى الله عليه وسلم فقال يا نبي الله جعلني الله فداك، هل اصابك من شىء. قال " لا ولكن عليك بالمراة ". فالقى ابو طلحة ثوبه على وجهه فقصد قصدها، فالقى ثوبه عليها فقامت المراة، فشد لهما على راحلتهما فركبا، فساروا حتى اذا كانوا بظهر المدينة او قال اشرفوا على المدينة قال النبي صلى الله عليه وسلم " ايبون تايبون، عابدون لربنا حامدون ". فلم يزل يقولها حتى دخل المدينة
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Ethics
- Hadith Index
- #6185
- Book Index
- 209
Grades
- -
