ஹதீஸ்கள்
#6166
ஸஹீஹ் அல்-புகாரீ - Ethics
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (தமது ‘விடை பெறும்’ ஹஜ் உரையில்) “உங்களுக்குக் கேடுதான் (வைலக்கும்)’ அல்லது ‘உங்களுக்கு அழிவுதான் (வைஹக்கும்)’. எனக்குப் பிறகு ஒருவர் மற்றவரின் கழுத்தை வெட்டிமாய்த்துக்கொள்ளும் இறைமறுப்பாளர்களாக நீங்கள் மாறிவிடாதீர்கள்” என்று கூறினார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஷுஅபா பின் அல்ஹஜ்ஜாஜ் (ரஹ்) அவர்களின் அறிவிப்பில், ‘வைஹக்கும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இடம்பெற்றுள்ளது. முஹம்மத் பின் ஸைத் (ரஹ்) அவர்களின் அறிவிப்பில், ‘வைலக்கும்’ அல்லது ‘வைஹக்கும்’ என்று இடம் பெற்றுள்ளது.187 அத்தியாயம் :
حدثنا عبد الله بن عبد الوهاب، حدثنا خالد بن الحارث، حدثنا شعبة، عن واقد بن محمد بن زيد، سمعت ابي، عن ابن عمر رضى الله عنهما عن النبي صلى الله عليه وسلم قال " ويلكم او ويحكم قال شعبة شك هو لا ترجعوا بعدي كفارا، يضرب بعضكم رقاب بعض ". وقال النضر عن شعبة ويحكم. وقال عمر بن محمد عن ابيه ويلكم او ويحكم
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Ethics
- Hadith Index
- #6166
- Book Index
- 192
Grades
- -
