ஹதீஸ்கள்
#6165
ஸஹீஹ் அல்-புகாரீ - Ethics
அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: கிராமவாசி ஒருவர், “அல்லாஹ்வின் தூதரே! புலம்பெயர்ந்து (ஹிஜ்ரத்) செல்வது பற்றி எனக்குத் தெரிவியுங்கள்” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “உனக்கு நாசம்தான் (வைஹக்க!) ஹிஜ்ரத்தின் நிலை மிகவும் கடினமானது. உன்னிடம் ஒட்டகம் ஏதேனும் இருக்கின் றதா?” என்று கேட்டார்கள். அவர், “ஆம் (இருக்கின்றது)” என்று பதிலளித்தார். நபி (ஸல்) அவர்கள், “ஒட்டகத்துக்குரிய ஸகாத்தை நீ கொடுத்துவருகிறாயா?” என்று கேட்டார்கள். அவர், “ஆம்” என்றார். நபி (ஸல்) அவர்கள், “அப்படியென்றால் நீ ஊர்களுக்கு அப்பால் சென்றுகூட நன்மை செய்யலாம். அல்லாஹ் உன் நற்செயல்க(ளின் பிரதிபலன்க)ளிலிருந்து எதையும் குறைக்கமாட்டான்” என்று சொன்னார்கள்.186 அத்தியாயம் :
حدثنا سليمان بن عبد الرحمن، حدثنا الوليد، حدثنا ابو عمرو الاوزاعي، قال حدثني ابن شهاب الزهري، عن عطاء بن يزيد الليثي، عن ابي سعيد الخدري رضى الله عنه ان اعرابيا قال يا رسول الله اخبرني عن الهجرة. فقال " ويحك ان شان الهجرة شديد، فهل لك من ابل ". قال نعم. قال " فهل تودي صدقتها ". قال نعم. قال " فاعمل من وراء البحار، فان الله لن يترك من عملك شييا
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Ethics
- Hadith Index
- #6165
- Book Index
- 191
Grades
- -
