ஹதீஸ்கள்
#6164
ஸஹீஹ் அல்-புகாரீ - Ethics
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, “நான் அழிந்துவிட்டேன், அல்லாஹ்வின் தூதரே!” என்றார். நபி (ஸல்) அவர்கள், “உமக்கு நாசம்தான் (வைஹக்க- என்ன நடந்தது?)” என்று கேட்டார்கள். அந்த மனிதர், “நான் ரமளான் மாதத்தில் (நோன்பு நோற்றுக்கொண்டு) என் மனைவியுடன் தாம்பத்திய உறவு கொண்டுவிட்டேன்” என்று சொன்னார். நபி (ஸல்) அவர்கள், “(இதற்குப் பரிகாரமாக) ஓர் அடிமையை விடுதலை செய்வீராக!” என்றார்கள். அவர், “(அதற்கான வசதி) என்னிடம் இல்லையே!” என்றார். நபி (ஸல்) அவர்கள், “அவ்வாறாயின், தொடர்ந்து இரு மாதம் நோன்பு நோற்பீராக!” என்றார்கள். அவர், “என்னால் இயலாது” என்றார். நபி (ஸல்) அவர்கள், “அவ்வாறாயின், (அறுபது) ஏழைகளுக்கு உணவளிப்பீராக!” என்றார்கள். அவர் “(அதற்கான வசதி) என்னிடம் இல்லை” என்றார். அப்போது நபி (ஸல்) அவர்களிடம் (பதினைந்து ‘ஸாஉ’ கொள்ளளவு கொண்ட அளவையான) ‘அரக்’ ஒன்று கொண்டுவரப்பட்டது. (அதில் பேரீச்சம் பழங்கள் இருந்தன.) உடனே நபி (ஸல்) அவர்கள், “இதைப் பெற்று தர்மம் செய்வீராக!” என்றார்கள். அதற்கு அந்த மனிதர், “அல்லாஹ்வின் தூதரே! என் குடும்பத்தார் அல்லாதோருக்கா (இதை நான் தர்மம் செய்ய)? என் உயிர் யார் கையிலுள்ளதோ அவன் மீதாணையாக! மதீனா எனும் கூடாரத்தின் இருமருங்கிலும் என்னைவிடத் தேவையானோர் யாருமில்லை” என்றார். (இதைக் கேட்ட) உடனே நபி (ஸல்) அவர்கள் தம் கடைவாய்ப் பற்கள் தெரியச் சிரித்துவிட்டு “(இதோ) இதைப் பெற்றுக்கொள்வீராக!” என்று சொன்னார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஒன்றில் “(‘வைஹக்க’ என்பதற்குப் பதிலாக) ‘வைலக்க’ (உனக்குக் கேடுதான்) என்று காணப்படுகிறது.185 அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Ethics
- Hadith Index
- #6164
- Book Index
- 190
Grades
- -