ஹதீஸ்கள்
#6162
ஸஹீஹ் அல்-புகாரீ - Ethics
அபூபக்ரா நுஃபைஉ பின் அல் ஹாரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் இன்னொரு மனிதரைப் பற்றிப் புகழ்ந்து பேசினார். அப்போது நபி (ஸல்) அவர்கள் “உனக்குக் கேடுதான் (வைலக்க!). உன் சகோதரரின் கழுத்தைத் துண்டித்துவிட்டாயே!” என மூன்று முறை கூறிவிட்டு, “உங்களில் ஒருவர் (தம் சகோதரரைப்) புகழ்ந்தேயாக வேண்டும் என்றிருந்தால், ‘(அவரைப் பற்றி) நான் (இவ்வாறு) எண்ணுகிறேன்’ என்று (மட்டும்) அவர் கூறட்டும். அதுவும் அவர் (அவ்வாறு இருக்கிறார் என) அறிந்தால் மட்டுமே அவர் இவ்வாறு கூறட்டும். அல்லாஹ்வே அவரைக் குறித்து விசாரணை (செய்து முடிவு) செய்பவன் ஆவான். நான் அல்லாஹ்வை முந்திக்கொண்டு யாரையும் தூய்மையானவர் என்று கூறமாட்டேன்” என்று கூறினார்கள்.183 அத்தியாயம் :
حدثنا موسى بن اسماعيل، حدثنا وهيب، عن خالد، عن عبد الرحمن بن ابي بكرة، عن ابيه، قال اثنى رجل على رجل عند النبي صلى الله عليه وسلم فقال " ويلك قطعت عنق اخيك ثلاثا من كان منكم مادحا لا محالة فليقل احسب فلانا والله حسيبه ولا ازكي على الله احدا. ان كان يعلم
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Ethics
- Hadith Index
- #6162
- Book Index
- 188
Grades
- -
