ஹதீஸ்கள்
#6160
ஸஹீஹ் அல்-புகாரீ - Ethics
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒருவர் தமது குர்பானி ஒட்டகத்தை இழுத்துக்கொண்டு (நடந்து) செல்வதைக் கண்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவரிடம், “அதில் ஏறிச் செல்லுங்கள்!” என்றார்கள். அவர், “இது குர்பானி ஒட்டகமாயிற்றே, அல்லாஹ்வின் தூதரே?” என்றார். நபி (ஸல்) அவர்கள், ‘இரண்டாவது தடவையில்’ அல்லது ‘மூன்றாவது தடவையில்’ “இதில் ஏறிச்செல்லும்! உமக்குக் கேடுதான்” என்றார்கள்.181 அத்தியாயம் :
حدثنا قتيبة بن سعيد، عن مالك، عن ابي الزناد، عن الاعرج، عن ابي هريرة رضى الله عنه ان رسول الله صلى الله عليه وسلم راى رجلا يسوق بدنة فقال له " اركبها ". قال يا رسول الله انها بدنة. قال " اركبها ويلك ". في الثانية او في الثالثة
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Ethics
- Hadith Index
- #6160
- Book Index
- 186
Grades
- -
