ஹதீஸ்கள்
#6159
ஸஹீஹ் அல்-புகாரீ - Ethics
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒருவர் தமது குர்பானி ஒட்டகத்தை இழுத்துக்கொண்டு (நடந்து) செல்வதைக் கண்ட நபி (ஸல்) அவர்கள், “அதில் ஏறிச் செல்லுங்கள்!” என்றார்கள். அதற்கு அவர், “இது குர்பானி ஒட்டகமாயிற்றே?” என்றார். நபி (ஸல்) அவர்கள், “(பரவாயில்லை) அதில் ஏறிச்செல்லும்!” என்றார்கள். (மீண்டும்) அவர், “இது குர்பானி ஒட்டகமாயிற்றே!” என்றதும் “அதில் ஏறிச் செல்க. உமக்குக் கேடுதான் (‘வைலக்க’)” என்றார்கள்.180 அத்தியாயம் :
حدثنا موسى بن اسماعيل، حدثنا همام، عن قتادة، عن انس رضى الله عنه ان النبي صلى الله عليه وسلم راى رجلا يسوق بدنة فقال " اركبها ". قال انها بدنة. قال " اركبها ". قال انها بدنة. قال " اركبها ويلك
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Ethics
- Hadith Index
- #6159
- Book Index
- 185
Grades
- -
