ஹதீஸ்கள்
#6158
ஸஹீஹ் அல்-புகாரீ - Ethics
உம்மு ஹானீ பின்த் அபீதாலிப் (ரலி) அவர்கள் கூறியதாவது: ‘மக்கா வெற்றி’ ஆண்டில் நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் குளித்துக்கொண்டிருக்க, அவர்களை அவர்களுடைய புதல்வி ஃபாத்திமா (ரலி) அவர்கள் மறைத்துக் கொண்டிருப்பதைக் கண்டேன். அப்போது நான் அவர்களுக்கு முகமன் (சலாம்) சொன்னேன். உடனே நபி (ஸல்) அவர்கள் “யார் அது?” என்று கேட்டார்கள். “நான் உம்மு ஹானீ பின்த் அபீதாலிப் (வந்திருக்கிறேன்)” என்று பதிலளித்தேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், “உம்மு ஹானீயே வருக!” எனக் கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் குளித்து முடித்தவுடன் ஒரே ஆடையை (தமது உடலில்) சுற்றிக்கொண்டவர்களாக எழுந்து நின்று எட்டு ரக்அத்கள் தொழுதார்கள். தொழுது முடித்ததும், “அல்லாஹ்வின் தூதரே! என் சகோதரர் (அலீ பின் அபீதாலிப்) நான் அடைக்கலம் அளித்திருக்கும் ஹுபைராவின் இன்ன மகனைக் கொலை செய்யப்போவதாகக் கருதுகிறார்” என்று கூறினேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உம்மு ஹானீயே! நீ அடைக்கலம் அளித்தவருக்கு நாமும் அடைக்கலம் அளித்துவிட்டோம்” என்று கூறினார்கள். உம்மு ஹானீ (ரலி) அவர்கள் குறிப்பிடுகிறார்கள்: (நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்ற) அந்த நேரம் முற்பகல் (ளுஹா) ஆகும்.178 அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Ethics
- Hadith Index
- #6158
- Book Index
- 184
Grades
- -