ஹதீஸ்கள்
#6157
ஸஹீஹ் அல்-புகாரீ - Ethics
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (ஹஜ்ஜை முடித்துக்கொண்டு மக்காவிலிருந்து) புறப்பட விரும்பினார்கள். அப்போது (தம் துணைவியாரான) ஸஃபிய்யா (ரலி) அவர்கள் தமது கூடார வாசலில் சோர்வாகவும் கவலையாகவும் இருக்கக் கண்டார்கள். ஏனெனில், அவர்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டிருந்தது. அப்போது நபி (ஸல்) அவர்கள் குறைஷியரின் வழக்கில் (செல்லமாகச் ஏசப்படும் வார்த்தையில்) அல்லாஹ் உன்னை அறுக்கட்டும்! உனக்குத் தொண்டை வலி வரட்டும்! நீ எம்மை (மக்காவிலிருந்து புறப்பட விடாமல்) தடுத்துவிட்டாய்” என்று கூறினார்கள். பிறகு, “நஹ்ருடைய (துல்ஹிஜ்ஜா பத்தாவது) நாளில் நீ (கஅபாவைச்) சுற்றி வந்தாயா?” என்று கேட்டார்கள். ஸஃபிய்யா (ரலி) அவர்கள், “ஆம்” என்று சொன்னார்கள். “அப்படியானால் (உன் ஹஜ் பூர்த்தியாகிவிட்டது). நீ புறப்படு” என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.176 அத்தியாயம் :
حدثنا ادم، حدثنا شعبة، حدثنا الحكم، عن ابراهيم، عن الاسود، عن عايشة رضى الله عنها قالت اراد النبي صلى الله عليه وسلم ان ينفر فراى صفية على باب خبايها كييبة حزينة لانها حاضت فقال " عقرى حلقى لغة قريش انك لحابستنا " ثم قال " اكنت افضت يوم النحر ". يعني الطواف قالت نعم. قال " فانفري اذا
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Ethics
- Hadith Index
- #6157
- Book Index
- 183
Grades
- -
