ஹதீஸ்கள்
#6156
ஸஹீஹ் அல்-புகாரீ - Ethics
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: பர்தா தொடர்பான வசனம் அருளப் பெற்றபிறகு, என் வீட்டினுள் வர அபுல் குஐஸின் சகோதரர் அஃப்லஹ் (ரலி) அவர்கள் அனுமதி கோரினார்கள். அப்போது நான், “அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அனுமதி கேட்காத வரை (உள்ளே வர) அவரை நான் அனுமதிக்கமாட்டேன். ஏனெனில், அபுல் குஐஸின் சகோதரர் (அஃப்லஹ்) எனக்குப் பாலூட்டியவர் அல்லர். மாறாக, அபுல்குஐஸ் அவர்களின் மனைவியே எனக்குப் பாலூட்டினார்” என்றேன். பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். அப்போது நான், “அல்லாஹ்வின் தூதரே! இந்த மனிதர் எனக்குப் பாலூட்டியவர் அல்லர். மாறாக, இவருடைய (சகோதரரின்) மனைவியே எனக்குப் பாலூட்டினார்” என்றேன். நபி (ஸல்) அவர்கள், “அவருக்கு (உள்ளே வர) அனுமதி கொடு! ஏனெனில், அவர் உன் (பால்குடித்) தந்தையின் சகோதரர்தான். உன் வலக்கை மண்ணைக் கவ்வட்டும்” என்று சொன்னார்கள். (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) உர்வா (ரஹ்) அவர்கள் கூறுகி றார்கள்: இதனால்தான் (என் சிறிய தாயார்) ஆயிஷா (ரலி) அவர்கள், “இரத்த உறவால் மணமுடிக்கத் தடை செய்யப்பட்டவர்களைப் பால்குடி உறவாலும் மணமுடிக்கத் தடை செய்யுங்கள்” என்று கூறுவார்கள்.175 அத்தியாயம் :
حدثنا يحيى بن بكير، حدثنا الليث، عن عقيل، عن ابن شهاب، عن عروة، عن عايشة، قالت ان افلح اخا ابي القعيس استاذن على بعد ما نزل الحجاب فقلت والله لا اذن له حتى استاذن رسول الله صلى الله عليه وسلم فان اخا ابي القعيس ليس هو ارضعني، ولكن ارضعتني امراة ابي القعيس. فدخل على رسول الله صلى الله عليه وسلم فقلت يا رسول الله ان الرجل ليس هو ارضعني، ولكن ارضعتني امراته. قال " ايذني له، فانه عمك، تربت يمينك ". قال عروة فبذلك كانت عايشة تقول حرموا من الرضاعة ما يحرم من النسب
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Ethics
- Hadith Index
- #6156
- Book Index
- 182
Grades
- -
