ஹதீஸ்கள்
#6150
ஸஹீஹ் அல்-புகாரீ - Ethics
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: இணைவைப்பாளர்களைத் தாக்கி வசைக்கவி பாட (கவிஞர்) ஹஸ்ஸான் பின் ஸாபித் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அனுமதி கேட்டார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(குறைஷியரான அவர்களுடன் பின்னிப்பிணைந்துள்ள) என் வமிசப் பரம்பரையை என்ன செய்வாய்?” என்று கேட்டார்கள். அதற்கு ஹஸ்ஸான் (ரலி) அவர்கள், “குழைத்த மாவிலிருந்து முடியை உருவியெடுப்பதைப் போன்று தங்களை(யும் தங்கள் வமிசப் பரம்பரையையும் வசையிóருந்து) உருவியெடுத்து விடுவேன்” என்று பதிலளித்தார்கள். (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) உர்வா (ரஹ்) அவர்கள் கூறுகி றார்கள்: நான் (என் சிறிய தாயார்) ஆயிஷா (ரலி) அவர்களிடம் ஹஸ்ஸான் பின் ஸாபித் (ரலி) அவர்களை (அவதூறு பரப்புவதில் சம்பந்தப்பட்டதால்) ஏசிக் கொண்டே போனேன். அப்போது அவர்கள், “அவரை ஏசாதே! ஏனெனில், அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்காக (இணைவைப்பாளர்களைத் தாக்கி) பதிலடி கொடுத்துக்கொண்டிருந்தார்” என்றார்கள்.169 அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Ethics
- Hadith Index
- #6150
- Book Index
- 176
Grades
- -