ஹதீஸ்கள்
#6144
ஸஹீஹ் அல்-புகாரீ - Ethics
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ஒரு மரத்தைப் பற்றி எனக்குக் கூறுங்கள். அதன் நிலை ஒரு முஸ்லிமின் நிலைக்குச் சமமாகும். அந்த மரம் தன் அதிபதியின் ஆணைக்கேற்ப எல்லா நேரங்களிலும் கனி தருகிறது. அதன் இலை உதிர்வதில்லை. (அது எந்த மரம்?)” என்று கேட்டார்கள். என் மனத்தில் அது பேரீச்சமரம்தான் என்று தோன்றியது. ஆயினும், (அதைப் பற்றிப்) பேச நான் விரும்பவில்லை. அங்கு (மூத்தவர்களான) அபூபக்ர் (ரலி) அவர்களும் உமர் (ரலி) அவர்களும் (ஏதும் பேசாமல்) இருந்தார்கள். அவர்கள் பேசாமலிருக்கவே, நபி (ஸல்) அவர்கள், “அது பேரீச்சமரம்தான்” என்றார்கள். நான் என் தந்தை (உமர் -ரலி) அவர்களுடன் வெளியில் வந்தபோது, “தந்தையே! அது பேரீச்சமரம்தான் என்று என் மனத்தில் தோன்றியது” என்றேன். அவர்கள், “ஏன் அதை நபி (ஸல்) அவர்களிடம் நீ சொல்லவில்லை? நீ அதைச் சொல்லியிருந்தால் இன்ன இன்னதைவிட எனக்கு மிகவும் விருப்பமானதாய் இருந்திருக்குமே!” என்று சொன்னார்கள். தாங்களும் அபூபக்ர் (ரலி) அவர்களும் பேசாமல் இருந்ததைக் கண்டதாலேயே நான் (அது குறித்துப் பேச) விரும்பவில்லை” என்றேன்.161 அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Ethics
- Hadith Index
- #6144
- Book Index
- 170
Grades
- -