ஹதீஸ்கள்
#6139
ஸஹீஹ் அல்-புகாரீ - Ethics
அபூஜுஹைஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது: சல்மான் அல்ஃபார்சீ (ரலி) அவர்களை யும் அபுத்தர்தா (ரலி) அவர்களையும் நபி (ஸல்) அவர்கள் (ஒப்பந்தச்) சகோதரர்களாக ஆக்கினார்கள். ஆகவே, சல்மான் (ரலி) அவர்கள் அபுத்தர்தா (ரலி) அவர்களை (அவரது இல்லத்திற்குச் சென்று) சந்தித்தார்கள். அப்போது (அபுத்தர்தாவின் துணைவியார்) உம்முத்தர்தா (ரலி) அவர்களை அழுக்கடைந்த ஆடையுடன் சல்மான் கண்டார்கள். அப்போது சல்மான் (ரலி) அவர்கள், “உங்களுக்கு என்ன நேர்ந்தது?” என்று கேட்டார்கள். அதற்கு உம்முத்தர்தா, “உங்கள் சகோதரர் அபுத்தர்தாவிற்கு உலகமே தேவையில்லைபோலும்” என்றார். பிறகு, அபுத்தர்தா (ரலி) அவர்கள் வந்து சல்மான் (ரலி) அவர்களுக்காக உணவு தயார் செய்தார்கள். பிறகு “(சல்மானே!) நீங்கள் சாப்பிடுங்கள்! நான் (நஃபில்) நோன்பு நோற்றுள்ளேன்” என்றார்கள் அபுத்தர்தா. அதற்கு சல்மான் (ரலி) அவர்கள், “நீங்கள் சாப்பிடாத வரை நான் சாப்பிடமாட்டேன்” என்று சொன்னார்கள். ஆகவே, (சல்மானுடன்) அபுத்தர்தா சாப்பிட்டார்கள். இரவு நேரம் வந்ததும் அபுத்தர்தா (ரலி) அவர்கள் (இரவுத் தொழுகைக்காக) நிற்கப்போனார்கள். அப்போது சல்மான் (ரலி) அவர்கள், “தூங்குங்கள்” என்றார்கள். ஆகவே, அபுத்தர்தா (ரலி) அவர்கள் தூங்கிவிட்டார்கள். பிறகு தொழுவதற்காக எழுந்தார்கள். அப்போதும் சல்மான் (ரலி) அவர்கள், “தூங்குங்கள்” என்றார்கள். இரவின் கடைசி நேரம் ஆனதும் சல்மான் (ரலி) அவர்கள், “இப்போது எழுங்கள்” என்று சொன்னார்கள். பிறகு அவர்கள் இருவரும் தொழுதார்கள். அப்போது சல்மான் (ரலி) அவர்கள் அபுத்தர்தா (ரலி) அவர்களிடம், “உங்கள் இறைவனுக்காகச் செய்ய வேண்டிய கடமைகள் உங்களுக்கு உள்ளன. மேலும், உங்கள் உடலுக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உங்களுக்கு உள்ளன. உங்கள் குடும்பத்தாருக்குச் செய்யவேண்டிய கடமைகளும் உங்களுக்கு உள்ளன. ஆகவே, ஒவ்வொருவருக்கும் அவரவருக்குச் சேரவேண்டிய உரிமைகளை வழங்குங்கள்” என்று கூறினார்கள். பின்னர் அபுத்தர்தா (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களிடம் சென்று (சல்மான் அவர்கள் தமக்குச் சொன்னதை) அவர்களிடம் தெரிவித்தார்கள். அப்போது அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள், “சல்மான் சொன்னது உண்மைதான்” என்றார்கள்.155 அபூஜுஹைஃபா வஹ்புஸ் ஸுவாஈ (ரலி) அவர்களுக்கு ‘வஹ்புல் கைர்’ என்றும் (பெயர்) சொல்லப்படுகிறது. அத்தியாயம் :
حدثنا محمد بن بشار، حدثنا جعفر بن عون، حدثنا ابو العميس، عن عون بن ابي جحيفة، عن ابيه، قال اخى النبي صلى الله عليه وسلم بين سلمان وابي الدرداء. فزار سلمان ابا الدرداء فراى ام الدرداء متبذلة فقال لها ما شانك قالت اخوك ابو الدرداء ليس له حاجة في الدنيا. فجاء ابو الدرداء فصنع له طعاما فقال كل فاني صايم. قال ما انا باكل حتى تاكل. فاكل، فلما كان الليل ذهب ابو الدرداء يقوم فقال نم. فنام، ثم ذهب يقوم فقال نم. فلما كان اخر الليل قال سلمان قم الان. قال فصليا فقال له سلمان ان لربك عليك حقا، ولنفسك عليك حقا، ولاهلك عليك حقا، فاعط كل ذي حق حقه. فاتى النبي صلى الله عليه وسلم فذكر ذلك له. فقال النبي صلى الله عليه وسلم " صدق سلمان ". ابو جحيفة وهب السوايي، يقال وهب الخير
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Ethics
- Hadith Index
- #6139
- Book Index
- 166
Grades
- -
