ஹதீஸ்கள்
#6134
ஸஹீஹ் அல்-புகாரீ - Ethics
அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் வந்து, “நீர் இரவெல்லாம் நின்று வணங்குவதாகவும் பகலெல்லாம் நோன்பு நோற்பதாகவும் எனக்குத் தெரிவிக்கப்பட்டதே! (அது உண்மை தானா?)” என்று கேட்டார்கள். நான், “ஆம்” என்று பதிலளித்தேன். (அதற்கு) நபி (ஸல்) அவர்கள், “அவ்வாறு செய்யாதீர்! (சிறிது நேரம்) தொழுவீராக! (சிறிது நேரம்) உறங்குவீராக! (சிலநாட்கள்) நோன்பு நோற்பீராக! (சில நாட்கள் நோன்பை) விட்டுவிடுவீராக! ஏனெனில், உமது உடலுக்குச் செய்ய வேண்டிய கடமையும் உமக்கு உண்டு; உமது கண்ணுக்குச் செய்ய வேண்டிய கடமையும் உமக்கு உண்டு; உம்முடைய விருந்தினருக்குச் செய்ய வேண்டிய கடமையும் உமக்கு உண்டு; உம்முடைய துணைவிக்குச் செய்ய வேண்டிய கடமையும் உமக்கு உண்டு. உமது வயது நீளக்கூடும். (அப்போது உம்மால் தொடர்நோன்பும் தொடர் வழிபாடும் சாத்தியப்படாமல்போகலாம். ஆகவே) ஒவ்வொரு மாதமும் (ஏதேனும்) மூன்று நாட்கள் நோன்பு நோற்பது உமக்குப் போதுமானதாகும். ஏனெனில், ஒவ்வொரு நற்செயலுக்கும் பிரதியாக அது போன்ற பத்து மடங்கு (நற்பலன்)கள் உண்டு. (இதன்படி மாதத்தில் மூன்று நாட்கள் நோன்பு நோற்பது மாதம் முழுவதும் நோற்றதற்குச் சமமாகும்.) எனவே, இது காலமெல்லாம் நோற்றதாக அமையும்” என்று கூறினார்கள். ஆனால், நான் சிரமத்தை வலிந்து ஏற்றுக்கொண்டேன்; அதனால் என்மீது சிரமம் சுமத்தப்பட்டது. நான் “(அல்லாஹ்வின் தூதரே!) இதற்கு மேலும் என்னால் முடியும்” என்றேன். நபி (ஸல்) அவர்கள், “அவ்வாறாயின், வாரத்திற்கு மூன்று நோன்பு நோற்றுக்கொள்க” என்றார்கள். நான் (மறுபடியும்) சிரமத்தை வலிந்து ஏற்றுக்கொண்டேன்; அதனால் என்மீது சிரமம் சுமத்தப்பட்டது. “இதற்கு மேலும் என்னால் முடியும் (அல்லாஹ்வின் தூதரே!)” என்றேன். நபி (ஸல்) அவர்கள், “அவ்வாறாயின், இறைத்தூதர் தாவூத் (அலை) அவர்கள் நோற்றவாறு நோன்பு நோற்றுக்கொள்வீராக” என்றார்கள். “இறைத்தூதர் தாவூத் (அலை) அவர்களின் நோன்பு எது?” என்று கேட்டேன். “(ஒருநாள் விட்டு ஒருநாள் நோற்பதால்) வருடத்தில் பாதி நாட்கள் நோற்பதாகும்” என்று பதிலளித்தார்கள்.151 அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Ethics
- Hadith Index
- #6134
- Book Index
- 161
Grades
- -