ஹதீஸ்கள்
#6132
ஸஹீஹ் அல்-புகாரீ - Ethics
அப்துல்லாஹ் பின் அபீமுளைக்கா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களுக்குப் பொன் பித்தான்கள் கொண்ட பட்டு அங்கிகள் சில அன்பளிப்பாக வழங்கப்பட்டன. அவற்றை அவர்கள் தம் தோழர்கள் சிலரிடையே பங்கிட்டார்கள். அவற்றி லிருந்து ஒன்றை மக்ரமா பின் நவ்ஃபல் (ரலி) அவர்களுக்காகத் தனியே எடுத்து வைத்தார்கள். மக்ரமா (ரலி) அவர்கள் வந்தபோது நபி (ஸல்) அவர்கள் (அந்த அங்கியுடன் வந்து) “உங்களுக்காக நான் இதை எடுத்து வைத்தேன்” என்று சொன்னார்கள். அய்யூப் (ரஹ்) அவர்களின் அறிவிப் பில், “அந்த ஆடையை எடுத்துவந்து அவரிடம் காட்டியவாறு” என்றும், “மக்ரமா (ரலி) அவர்களின் சுபாவத்தில் சிறிது (கடுமை) இருந்தது” என்றும் கூறப்பெற்றுள்ளது.149 இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஹாத்திம் பின் வர்தான் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், “நபி (ஸல்) அவர்களிடம் சில அங்கிகள் வந்தன” என்று மிஸ்வர் (ரலி) அவர்களிடமிருந்தே (அறிவிப்பாளர்தொடர் முறிவுறாமல்- முத்தஸிலாக) அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Ethics
- Hadith Index
- #6132
- Book Index
- 159
Grades
- -