ஹதீஸ்கள்
#6131
ஸஹீஹ் அல்-புகாரீ - Ethics
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் (எங்கள் வீட்டுக்குள் நுழைய) நபி (ஸல்) அவர்களிடம் அனுமதி கேட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள், “அவருக்கு (உள்ளே வர) அனுமதி கொடுங்கள்; (இவர்) அந்தக் கூட்டத்தாரிலேயே (மிக) மோசமானவர்” என்று சொன்னார்கள். (வீட்டுக்குள்) அவர் வந்தபோது (எல்லாரிடமும் பேசுவதுபோல்) அவரிடமும் கனிவாகப் பேசினார்கள். (அவர் சென்றதும்) நான், “அல்லாஹ்வின் தூதரே அந்த மனிதரைப் பற்றித் தாங்கள் ஒன்று சொன்னீர்கள். பிறகு அவரிடமே கனிவாகப் பேசினீர்களே?” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “ஆயிஷா! மக்கள் யாருடைய அருவருப்பான பேச்சுகளிலிருந்து தங்களைக் காத்துக்கொள்வதற்காக அவரிடமிருந்து ஒதுங்குகிறார்களோ அவரே இறைவனிடம் தகுதியில் மிகவும் மோசமானவர்” என்று கூறினார்கள்.148 அத்தியாயம் :
حدثنا قتيبة بن سعيد، حدثنا سفيان، عن ابن المنكدر، حدثه عروة بن الزبير، ان عايشة، اخبرته. انه، استاذن على النبي صلى الله عليه وسلم رجل فقال " ايذنوا له فبيس ابن العشيرة ". او " بيس اخو العشيرة ". فلما دخل الان له الكلام. فقلت له يا رسول الله قلت ما قلت، ثم النت له في القول. فقال " اى عايشة، ان شر الناس منزلة عند الله من تركه او ودعه الناس اتقاء فحشه
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Ethics
- Hadith Index
- #6131
- Book Index
- 158
Grades
- -
