ஹதீஸ்கள்
#6127
ஸஹீஹ் அல்-புகாரீ - Ethics
அஸ்ரக் பின் கைஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நாங்கள் (ஈரானிலுள்ள) ‘அஹ்வாஸ்’ எனுமிடத்திலிருக்கும் ஓர் ஆற்றங்கரை யில் இருந்துகொண்டிருந்தோம்.-அதில் தண்ணீர் வற்றிப்போயிருந்தது.- அப்போது அபூபர்ஸா அல்அஸ்லமீ (ரலி) அவர்கள் குதிரையொன்றில் வந்து (இறங்கி) அந்தக் குதிரையை அவிழ்த்துவிட்டுத் தொழுதார்கள். அப்போது அந்தக் குதிரை நடக்கலாயிற்று. உடனே அபூபர்ஸா (ரலி) அவர்கள் தமது தொழுகையை விட்டுவிட்டு குதிரையைப் பின்தொடர்ந்து சென்று, அதை அடைந்து பிடித்துக்கொண்டார்கள். பிறகு வந்து தமது தொழுகையை நிறைவு செய்தார்கள். எங்களிடையே (மாறுபட்ட) சிந்தனைகொண்ட (காரிஜிய்யாக்களில்) ஒரு மனிதர் இருந்தார். அவர், “ஒரு குதிரைக்காகத் தமது தொழுகையையே விட்டுவிட்ட இந்த முதியவரைப் பாருங்கள்” என்று கூறியவாறு (சபித்தவராக) முன்னோக்கி வந்தார். உடனே அபூபர்ஸா (ரலி) அவர்கள் அவரைப் பார்த்து, “நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் பிரிந்ததிலிருந்து என்னுடன் யாரும் (இவ்வளவு) கடுமையாக நடந்துகொண்டதில்லை. எனது இல்லம் தொலைவில் உள்ளது. நான் (எனது குதிரையை) விட்டுவிட்டு தொழுதுகொண்டிருந்தால் (அது எங்காவது போய்விடும். பிறகு) நான் என் வீட்டாரிடம் இரவுவரை போய்ச் சேர முடியாது” என்று கூறினார்கள். மேலும், தாம் நபி (ஸல்) அவர்களுடன் தோழமை கொண்டிருந்ததாகவும் அப்போது நபி (ஸல்) அவர்கள் (எதிலும்) எளிதாக நடந்துகொண்டதாகவும் குறிப்பிட் டார்கள்.144 அத்தியாயம் :
حدثنا ابو النعمان، حدثنا حماد بن زيد، عن الازرق بن قيس، قال كنا على شاطي نهر بالاهواز قد نضب عنه الماء، فجاء ابو برزة الاسلمي على فرس، فصلى وخلى فرسه، فانطلقت الفرس، فترك صلاته وتبعها حتى ادركها، فاخذها ثم جاء فقضى صلاته، وفينا رجل له راى، فاقبل يقول انظروا الى هذا الشيخ ترك صلاته من اجل فرس. فاقبل فقال ما عنفني احد منذ فارقت رسول الله صلى الله عليه وسلم وقال ان منزلي متراخ فلو صليت وتركت لم ات اهلي الى الليل. وذكر انه صحب النبي صلى الله عليه وسلم فراى من تيسيره
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Ethics
- Hadith Index
- #6127
- Book Index
- 154
Grades
- -
