ஹதீஸ்கள்
#6110
ஸஹீஹ் அல்-புகாரீ - Ethics
அபூமஸ்ஊத் உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “(அல்லாஹ்வின் தூதரே!) இன்ன மனிதர் எங்களுக்குத் தொழுகையை நீட்டுவதால் நான் அதிகாலை(க் கூட்டு)த்தொழுகைக்கு (ஃபஜ்ருடைய ஜமாஅத் திற்கு)ச் செல்வதில்லை” என்று கூறினார். இதைக் கேட்டதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆற்றிய உரையின்போது முன்எப்போதும் இல்லாத அளவுக்குக் கடுமையாகக் கோபம் கொண்டதை நான் கண்டேன். அப்போது அவர்கள், “மக்களே! (வணக்க வழிபாடுகளில்) வெறுப்பை ஏற்படுத்துகின்றவர்களும் உங்களில் உள்ளனர். உங்களில் யாரேனும் மக்களுக்கு (தலைமையேற்று)த் தொழுவித்தால் அவர் சுருக்கமாகத் தொழுகை நடத்தட்டும். ஏனெனில், மக்களில் நோயாளிகளும் முதியோரும் அலுவல் உடையோரும் இருக்கின்றனர்” என்று கூறினார்கள்.126 அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Ethics
- Hadith Index
- #6110
- Book Index
- 137
Grades
- -