ஹதீஸ்கள்
#6108
ஸஹீஹ் அல்-புகாரீ - Ethics
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: (என் தந்தை) உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் பயணிகள் சிலரிடையே இருந்துகொண்டிருந்தபோது அவர்களை நான் அடைந்தேன். அப்போது உமர் (ரலி) அவர்கள் தம் தந்தையின் மீது சத்தியம் செய்தார்கள். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களை அழைத்து, “அறிந்துகொள்ளுங்கள்! உங்கள் தந்தையர்மீது சத்தியம் செய்வதை அல்லாஹ் உங்களுக்குத் தடை செய்துவிட்டான். யார் சத்தியம் செய்ய விழைகிறாரோ அவர் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்யட்டும். அல்லது மௌனமாக இருந்துவிடட்டும்” என்று கூறினார்கள்.123 அத்தியாயம் :
حدثنا قتيبة، حدثنا ليث، عن نافع، عن ابن عمر رضى الله عنهما انه ادرك عمر بن الخطاب في ركب وهو يحلف بابيه، فناداهم رسول الله صلى الله عليه وسلم " الا ان الله ينهاكم ان تحلفوا بابايكم، فمن كان حالفا فليحلف بالله، والا فليصمت
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Ethics
- Hadith Index
- #6108
- Book Index
- 135
Grades
- -
