ஹதீஸ்கள்
#6091
ஸஹீஹ் அல்-புகாரீ - Ethics
உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது: உம்மு சுலைம் (ரலி) அவர்கள் (நபி (ஸல்) அவர்களிடம்), “அல்லாஹ்வின் தூதரே! சத்தியத்தைக் கூற அல்லாஹ் வெட்கப்படுவதில்லை. ஒரு பெண்ணுக்குத் தூக்கத்தில் ஸ்கலிதம் ஏற்பட்டால் அவள் மீது குளியல் கடமையாகுமா?” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “ஆம்; அவள் (மதன) நீரைப் பார்த்தால் (குளியல் அவள்மீது கடமைதான்.)” என்று பதிலளித்தார்கள். இதைக் கேட்டு நான் சிரித்தவாறு, “பெண்ணுக்குக் கூடவா தூக்க ஸ்கலிதம் ஏற்படும்?” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “பிறகு எவ்வாறு குழந்தை (தாயின்) சாயலில் பிறக்கிறது?” என்று கேட்டார்கள்.109 அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Ethics
- Hadith Index
- #6091
- Book Index
- 118
Grades
- -