ஹதீஸ்கள்
#6087
ஸஹீஹ் அல்-புகாரீ - Ethics
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, “நான் அழிந்துவிட்டேன்; நான் ரமளான் மாதத்தில் (நோன்பு நோற்றுக்கொண்டு) என் மனைவியுடன் தாம்பத்திய உறவு கொண்டுவிட்டேன்” என்று சொன்னார். நபி (ஸல்) அவர்கள், “(இதற்குப் பரிகாரமாக) ஓர் அடிமையை விடுதலை செய்வீராக” என்று சொன்னார்கள். அவர், “என்னிடம் அடிமை இல்லை” என்று சொன்னார். நபி (ஸல்) அவர்கள், “அவ்வாறாயின் தொடர்ந்து இரு மாதம் நோன்பு நோற்பீராக” என்று சொன்னார்கள். அவர், “எனக்குச் சக்தியில்லை” என்று சொன்னார். நபி (ஸல்) அவர்கள், “அவ்வாறாயின் அறுபது ஏழைகளுக்கு உணவளிப்பீராக” என்று கூறினார்கள். அவர், “என்னிடம் ஏதுமில்லை” என்று சொன்னார். அப்போது (நபி (ஸல்) அவர்களிடம்) ‘அரக்’ கொண்டுவரப்பட்டது. அதில் பேரீச்சம்பழம் இருந்தது. -அறிவிப்பாளர்களில் ஒருவரான இப்ராஹீம் பின் சஅத் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: ‘அரக்’ என்பது (பதினைந்து ‘ஸாஉ’ பிடிக்கும்) ஒரு முகத்தலளவை ஆகும்- அப்போது நபி (ஸல்) அவர்கள், “கேள்வி கேட்டவர் எங்கே?” (என்று கேட்க, அவர் வந்தார். அவரிடம்) “இதை(ப் பெற்று) தர்மம் செய்வீராக!” என்று சொன் னார்கள். அந்த மனிதர் “என்னைவிட ஏழையாக இருப்போருக்கா நான் தர்மம் செய்வது? கருங்கற்கள் நிறைந்த (மதீனாவின்) இரண்டு மலைகளுக்கு இடைப்பட்ட பகுதியில் எங்களைவிடப் பரம ஏழையான குடும்பத்தார் யாருமில்லை” என்று சொன்னார். (இதைக் கேட்ட) நபி (ஸல்) அவர்கள் தம் கடைவாய்ப்பற்கள் தெரியும் அளவுக்குச் சிரித்தார்கள். (பிறகு) “அவ்வாறாயின் நீங்களே (அதற்கு உரியவர்கள்)” என்று சொன்னார்கள்.105 அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Ethics
- Hadith Index
- #6087
- Book Index
- 115
Grades
- -