ஹதீஸ்கள்
#6079
ஸஹீஹ் அல்-புகாரீ - Ethics
நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: என் பெற்றோர் (அபூபக்ர்-உம்மு ரூமான்) எனக்கு விவரம் தெரிந்தது முதல் (இஸ்லாமிய) மார்க்கத்தைக் கடைப்பிடிப்பவர்களாகவே இருந்தார்கள். பகலின் இரண்டு ஓரங்களான காலை யிலும் மாலையிலும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் வருகைதராமல் (மக்காவில்) எந்த நாளும் எங்களுக்குக் கழிந்ததில்லை. நாங்கள் ஒருநாள் உச்சிப் பொழுதின்போது அபூபக்ர் (ரலி) அவர்களின் வீட்டில் அமர்ந்துகொண்டிருந்தோம். அப்போது ஒருவர் அபூபக்ர் (ரலி) அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நம்மிடம் வருகைதராத நேரத்தில் (வழக்கத்திற்கு மாறாக) இதோ வந்து கொண்டிருக்கிறார்கள்” என்று கூறினார். (அதற்கு) அபூபக்ர் (ரலி) அவர்கள், “ஏதோ (முக்கிய) விவகாரம்தான் நபியவர்களை இந்த நேரத்தில் (இங்கு) வரச்செய்திருக்கிறது” என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், “(ஹிஜ்ரத்) புறப்பட்டுச் செல்ல எனக்கு (இறைவனிட மிருந்து) அனுமதி வழங்கப்பட்டுவிட்டது” என்று சொன்னார்கள்.91 அத்தியாயம் :
حدثنا ابراهيم، اخبرنا هشام، عن معمر،. وقال الليث حدثني عقيل، قال ابن شهاب فاخبرني عروة بن الزبير، ان عايشة، زوج النبي صلى الله عليه وسلم قالت لم اعقل ابوى الا وهما يدينان الدين، ولم يمر عليهما يوم الا ياتينا فيه رسول الله صلى الله عليه وسلم طرفى النهار بكرة وعشية، فبينما نحن جلوس في بيت ابي بكر في نحر الظهيرة قال قايل هذا رسول الله صلى الله عليه وسلم في ساعة لم يكن ياتينا فيها. قال ابو بكر ما جاء به في هذه الساعة الا امر. قال " اني قد اذن لي بالخروج
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Ethics
- Hadith Index
- #6079
- Book Index
- 107
Grades
- -
