ஹதீஸ்கள்
#6059
ஸஹீஹ் அல்-புகாரீ - Ethics
இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஹுனைன் போரில் கிடைத்த செல்வங்களைப்) பங்கிட்டார்கள். அப்போது அன்சாரிகளில் ஒரு மனிதர், “அல்லாஹ்வின் மீதாணையாக! இதில் முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் திருப்தியை நாடவில்லை” என்று (மனத்தாங்கலுடன்) பேசினார். ஆகவே, நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று அவர்களிடம் (அம்மனிதர் கூறியதைச்) சொன்னேன். (அதைக் கேட்ட) உடனே அவர்களின் முகம் (கோபத்தால் நிறம்) மாறிவிட் டது. (தொடர்ந்து) அவர்கள், “(இறைத் தூதர்) மூசாவுக்கு அல்லாஹ் கருணை புரிவானாக! அவர்கள் இதைவிட அதிக மனவேதனைக்கு ஆளாக்கப்பட்டார்கள். ஆயினும் சகித்துக்கொண்டார்கள்” என்று சொன்னார்கள்.76 அத்தியாயம் :
حدثنا محمد بن يوسف، اخبرنا سفيان، عن الاعمش، عن ابي وايل، عن ابن مسعود رضى الله عنه قال قسم رسول الله صلى الله عليه وسلم قسمة، فقال رجل من الانصار والله ما اراد محمد بهذا وجه الله. فاتيت رسول الله صلى الله عليه وسلم فاخبرته، فتمعر وجهه وقال " رحم الله موسى، لقد اوذي باكثر من هذا فصبر
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Ethics
- Hadith Index
- #6059
- Book Index
- 89
Grades
- -
