ஹதீஸ்கள்
#6049
ஸஹீஹ் அல்-புகாரீ - Ethics
உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (ரமளானில் வரும்) ‘லைலத்துல் கத்ர்’ (கண்ணியமிக்க இரவு) பற்றி (அது ரமளான் மாதத்தில் எந்த இரவு என்று) மக்களுக்குத் தெரிவிப்பதற்காக (தமது வீட்டிலிருந்து) புறப்பட்டார்கள். அப்போது இரு முஸ்லிம்கள் சச்சரவு செய்துகொண்டிருந்தார்கள். (இதைக் கண்ணுற்ற) நபி (ஸல்) அவர்கள், “லைலத்துல் கத்ர் பற்றி உங்களுக்குத் தெரிவிப்பதற்காக நான் (வீட்டிலிருந்து) புறப்பட்டேன். அப்போது இன்னாரும் இன்னாரும் தமக்குள் சச்சரவு செய்துகொண்டிருந்தனர். ஆகவே, அது (என் நினைவிலிருந்து) அகற்றப்பட்டுவிட்டது. அதுவும் உங்களுக்கு ஒரு நன்மையாகவே இருக்கலாம். எனவே, (ரமளான் மாதத்தின் இருபத்து) ஒன்பதாவது, (இருபத்து) ஏழாவது, (இருபத்து) ஐந்தாவது இரவுகளில் அதைத் தேடிக் கொள்ளுங்கள்” என்று சொன்னார்கள்.63 அத்தியாயம் :
حدثنا مسدد، حدثنا بشر بن المفضل، عن حميد، قال قال انس حدثني عبادة بن الصامت، قال خرج رسول الله صلى الله عليه وسلم ليخبر الناس بليلة القدر، فتلاحى رجلان من المسلمين، قال النبي صلى الله عليه وسلم " خرجت لاخبركم، فتلاحى فلان وفلان وانها رفعت، وعسى ان يكون خيرا لكم، فالتمسوها في التاسعة والسابعة والخامسة
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Ethics
- Hadith Index
- #6049
- Book Index
- 79
Grades
- -
