ஹதீஸ்கள்
#6048
ஸஹீஹ் அல்-புகாரீ - Ethics
சுலைமான் பின் ஸுரத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் அருகில் இரண்டுபேர் ஒருவரையொருவர் ஏசிக் கொண்டனர். அவர்களில் ஒருவருக்கு மிகக் கடுமையான கோபம் ஏற்பட்டு அவரது முகம் புடைத்து, நிறம் மாறிவிட்டது. அப்போது நபி (ஸல்) அவர்கள், “எனக்கு ஒரு (பிரார்த்தனை) வார்த்தை தெரியும். அதை இவர் சொல்வாராயின் இவருக்கு ஏற்பட்டிருக்கக்கூடிய (கோபமான)து போய்விடும்” என்று சொன்னார்கள். (இதைக் கேட்டுக்கொண்டிருந்தவர்களில்) ஒருவர் (கோபத்திலிருந்த) அந்த மனிதரை நோக்கி நடந்து, நபி (ஸல்) அவர்கள் கூறியதை எடுத்துக்கூறி, “ஷைத்தானிடமிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோரு” என்றார். அதற்கு அம்மனிதர் “(கவலைப்படும்படி) பிணி ஏதேனும் எனக்கு ஏற்பட்டுவிட்டதாக நினைக்கிறீரா? நான் என்ன பைத்தியக் காரனா? (உமது வேலையைக் கவனிக் கச்) செல்!” என்றார்.62 அத்தியாயம் :
حدثنا عمر بن حفص، حدثنا ابي، حدثنا الاعمش، قال حدثني عدي بن ثابت، قال سمعت سليمان بن صرد، رجلا من اصحاب النبي صلى الله عليه وسلم قال استب رجلان عند النبي صلى الله عليه وسلم فغضب احدهما، فاشتد غضبه حتى انتفخ وجهه وتغير، فقال النبي صلى الله عليه وسلم " اني لاعلم كلمة لو قالها لذهب عنه الذي يجد ". فانطلق اليه الرجل فاخبره بقول النبي صلى الله عليه وسلم وقال تعوذ بالله من الشيطان. فقال اترى بي باس امجنون انا اذهب
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Ethics
- Hadith Index
- #6048
- Book Index
- 78
Grades
- -
