ஹதீஸ்கள்
#6040
ஸஹீஹ் அல்-புகாரீ - Ethics
நபி (ஸல்) அவர்கள் கூறி னார்கள்: ஓர் அடியாரை அல்லாஹ் நேசிக்கும்பொழுது (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்களை அவன் அழைத்து, “அல்லாஹ் இன்னாரை நேசிக்கிறான். ஆகவே, நீங்களும் அவரை நேசியுங்கள்” என்று கூறுவான். ஆகவே, அவரை ஜிப்ரீலும் நேசித்துவிட்டு விண்ணகத்தில் வசிப்பவர்களை அழைத்து, “அல்லாஹ் இன்னாரை நேசிக்கிறான். நீங்களும் அவரை நேசியுங்கள்” என்று ஜிப்ரீல் அறிவிப்பார். உடனே விண்ணகத்தாரும் அவரை நேசிப்பார்கள். பிறகு அவருக்குப் பூமியில் வசிப்பவர்களிடமும் அங்கீகாரம் அளிக்கப்படுகிறது. இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.54 அத்தியாயம் :
حدثنا عمرو بن علي، حدثنا ابو عاصم، عن ابن جريج، قال اخبرني موسى بن عقبة، عن نافع، عن ابي هريرة، عن النبي صلى الله عليه وسلم قال " اذا احب الله عبدا نادى جبريل ان الله يحب فلانا، فاحبه. فيحبه جبريل، فينادي جبريل في اهل السماء ان الله يحب فلانا، فاحبوه. فيحبه اهل السماء، ثم يوضع له القبول في اهل الارض
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Ethics
- Hadith Index
- #6040
- Book Index
- 70
Grades
- -
