ஹதீஸ்கள்
#6003
ஸஹீஹ் அல்-புகாரீ - Ethics
நபி (ஸல்) அவர்களின் வளர்ப்புப் பேரரான) உசாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (சிறுவனாக இருந்த) என்னைப் பிடித்துத் தமது ஒரு தொடையின் மீதும் (தம் சொந்தப் பேரரான) ஹசன் பின் அலீ (ரலி) அவர்களைப் பிடித்து தமது இன்னொரு தொடையின் மீதும் அமர்த்திக்கொண்டு பிறகு எங்கள் இருவரையும் கட்டியணைத்த வாறு, “இறைவா! இவர்கள் இருவர்மீதும் நான் அன்பு செலுத்துகிறேன். நீயும் இவர்கள்மீது அன்பு செலுத்துவாயாக!” என்றார்கள்.27 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) சுலைமான பின் தர்கான் அத்-தைமீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (நான் இந்த ஹதீஸை அபூஉஸ்மான் அந்நஹ்தீ (ரஹ்) அவர்களிடமிருந்து அபூதமீமா பின் முஜாலித் (ரஹ்) அவர்கள் வாயிலாகக் கேட்டேனா; அல்லது நேரடியாக அபூஉஸ்மானிடமே கேட்டேனா என) இந்த ஹதீஸ் விஷயத்தில் எனக்குச் சந்தேகம் இருந்தது. இந்நிலையில் இத்தனை முறை இதை அறிவித்துவிட்டோமே என்று (மனத்துக்குள்) சொல்லிக் கொண்டேன். பின்னர் (எடுத்துப்) பார்த்தபோது அபூஉஸ்மானிடமிருந்து (நேரடியாக) நான் கேட்டவற்றில் இதுவும் பதிவு செய்யப்பட்டிருந்ததைக் கண்டேன். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Ethics
- Hadith Index
- #6003
- Book Index
- 34
Grades
- -