ஹதீஸ்கள்
#5999
ஸஹீஹ் அல்-புகாரீ - Ethics
உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஹவாஸின் குலத்தைச் சேர்ந்த) கைதிகள் சிலர் நபி (ஸல்) அவர்களிடம் வந்தார்கள். அவர்களிடையே இருந்த ஒரு பெண்ணின் மார்பில் பால் சுரந்தது. அவள் பாலூட்டுவதற்காக(த் தன் குழந்தையைத் தேடினாள். குழந்தை கிடைக்கவில்லை. எனவே), கைதிகளில் எந்தக் குழந்தையைக் கண்டாலும், அதை (வாரி) எடுத்து(ப் பாலூட்டினாள். தன் குழந்தை கிடைத்தவுடன் அதை எடுத்து)த் தன் வயிற்றோடு அணைத்துப் பாலூட்டலானாள். அப்போது எங்களிடம் நபி (ஸல்) அவர்கள், “இந்தப் பெண் தன் குழந்தையை தீயில் எறிவாளா? சொல்லுங்கள்!” என்றார்கள். நாங்கள், “இல்லை, எந்நிலையிலும் அவளால் எறிய முடியாது” என்று சொன்னோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இந்தக் குழந்தையின் மீது இவளுக்குள்ள அன்பைவிட அல்லாஹ் தன் அடியார்கள்மீது மிகவும் அன்பு வைத்துள்ளான்” என்று சொன்னார்கள். அத்தியாயம் :
حدثنا ابن ابي مريم، حدثنا ابو غسان، قال حدثني زيد بن اسلم، عن ابيه، عن عمر بن الخطاب رضى الله عنه قدم على النبي صلى الله عليه وسلم سبى، فاذا امراة من السبى قد تحلب ثديها تسقي، اذا وجدت صبيا في السبى اخذته فالصقته ببطنها وارضعته، فقال لنا النبي صلى الله عليه وسلم " اترون هذه طارحة ولدها في النار ". قلنا لا وهى تقدر على ان لا تطرحه. فقال " الله ارحم بعباده من هذه بولدها
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Ethics
- Hadith Index
- #5999
- Book Index
- 30
Grades
- -
