ஹதீஸ்கள்
#5992
ஸஹீஹ் அல்-புகாரீ - Ethics
ஹகீம் பின் ஹிஸாம் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான், “அல்லாஹ்வின் தூதரே! நான் (இஸ்லாத்தை ஏற்பதற்கு முன்பு) அறியாமைக் காலத்தில் உறவைப் பேணுதல், அடிமைகளை விடுதலை செய்தல், தானதர்மம் செய்தல் ஆகிய நற்செயல்களைப் புரிந்துள்ளேன். அவற்றுக்கு (மறுமையில்) எனக்கு நற்பலன் ஏதும் உண்டா? கூறுங்கள்!” என்று கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நீர் முன்னர் செய்த நற்செயல்(களுக்குரிய நற்பலன்)களுடனேயே இஸ்லாத்தைத் தழுவியுள்ளீர்” என்று பதிலளித்தார்கள்.20 இந்த ஹதீஸ் ஐந்து அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் சிலவற்றில் ‘நற்செயல்’ என்பதைக் குறிக்க மூலத்தில் ‘தஹன்னுஸ்’ என்றும், வேறுசிலவற்றில் ‘தஹன்னுத்’ என்றும் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا ابو اليمان، اخبرنا شعيب، عن الزهري، قال اخبرني عروة بن الزبير، ان حكيم بن حزام، اخبره انه، قال يا رسول الله ارايت امورا كنت اتحنث بها في الجاهلية من صلة وعتاقة وصدقة، هل لي فيها من اجر. قال حكيم قال رسول الله صلى الله عليه وسلم " اسلمت على ما سلف من خير ". ويقال ايضا عن ابي اليمان اتحنث. وقال معمر وصالح وابن المسافر اتحنث. وقال ابن اسحاق التحنث التبرر، وتابعهم هشام عن ابيه
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Ethics
- Hadith Index
- #5992
- Book Index
- 23
Grades
- -
