ஹதீஸ்கள்
#5976
ஸஹீஹ் அல்-புகாரீ - Ethics
அபூபக்ரா நுஃபைஉ பின் அல் ஹாரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒருமுறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “பெரும்பாவங்களிலேயே மிகப் பெரும் பாவங்களை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?” என்று மூன்று முறை கேட்டார்கள். நாங்கள், “ஆம், அல்லாஹ்வின் தூதரே! (அறிவியுங்கள்)” என்று கூறினோம். நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வுக்கு இணைகற்பிப்பதும், பெற்றோரைப் புண்படுத்துவதும்” என்று சொல்லிவிட்டு சாய்ந்துகொண்டிருந்த அவர்கள் எழுந்து அமர்ந்து, “அறிந்துகொள்ளுங்கள்: பொய் பேசுவதும் பொய் சாட்சியமும் (மிகப் பெரும் பாவம்தான்); பொய் பேசுவதும் பொய் சாட்சியமும் (மிகப் பெரும் பாவம்தான்)” என்று கூறினார்கள். இதை அவர்கள் திரும்பத் திரும்பச் சொல்óக்கொண்டேயிருந்தார்கள். (இதைக் கண்ட) நான் “அவர்கள் நிறுத்திக்கொள்ளக் கூடாதா?” என்றேன்.8 அத்தியாயம் :
حدثني اسحاق، حدثنا خالد الواسطي، عن الجريري، عن عبد الرحمن بن ابي بكرة، عن ابيه رضى الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم " الا انبيكم باكبر الكباير ". قلنا بلى يا رسول الله. قال " الاشراك بالله، وعقوق الوالدين ". وكان متكيا فجلس فقال " الا وقول الزور وشهادة الزور، الا وقول الزور وشهادة الزور ". فما زال يقولها حتى قلت لا يسكت
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Ethics
- Hadith Index
- #5976
- Book Index
- 7
Grades
- -
