ஹதீஸ்கள்
#5970
ஸஹீஹ் அல்-புகாரீ - Ethics
வலீத் பின் அய்ஸார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களின் இல்லத்தைச் சுட்டிக் காட்டியவாறு அபூஅம்ர் அஷ்ஷைபானீ (ரஹ்) அவர்கள், “(இதோ!) இந்த வீட்டுக்காரர் (பின்வருமாறு) எனக்குத் தெரிவித்தார்கள்” என்று கூறினார்கள்: நான் நபி (ஸல்) அவர்களிடம், “வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமான செயல் (அமல்) எது?” என்று கேட்டேன். அவர்கள், “தொழுகையை அதற்குரிய நேரத்தில் நிறைவேற்றுவது” என்றார்கள். “பிறகு எது?” என்று கேட்டேன். “தாய் தந்தையருக்கு நன்மை செய்வது” என்றார்கள். (நான் தொடர்ந்து) “பிறகு எது?” என்றேன். அவர்கள், “அல்லாஹ்வின் வழியில் அறப்போர் புரிவது” என்று பதிலளித்தார்கள். இவற்றை (மட்டுமே) என்னிடம் நபி (ஸல்) அவர்கள் தெரிவித்தார்கள். இன்னும் அதிகமாக (இது குறித்து) நான் அவர்களிடம் கேட்டிருந்தால் எனக்கு இன்னும் நிறைய பதிலளித்திருப்பார்கள்.2 அத்தியாயம் :
حدثنا ابو الوليد، حدثنا شعبة، قال الوليد بن عيزار اخبرني قال سمعت ابا عمرو الشيباني، يقول اخبرنا صاحب، هذه الدار واوما بيده الى دار عبد الله قال سالت النبي صلى الله عليه وسلم اى العمل احب الى الله قال " الصلاة على وقتها ". قال ثم اى قال " ثم بر الوالدين ". قال ثم اى قال " الجهاد في سبيل الله ". قال حدثني بهن ولو استزدته لزادني
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Ethics
- Hadith Index
- #5970
- Book Index
- 1
Grades
- -
