ஹதீஸ்கள்
#5961
ஸஹீஹ் அல்-புகாரீ - Dress
நபி (ஸல்) அவர்களின் துணைவி யார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் உருவப்படங்கள் உள்ள திண்டு ஒன்றை விலைக்கு வாங்கினேன். அதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பார்த்தபோது வீட்டுக்குள் நுழையாமல் வாசலிலேயே நின்றுவிட்டார்கள். அவர் களின் முகத்தில் வெறுப்பு தெரிந்தது. நான், ‘‘அல்லாஹ்வின் தூதரே! நான் அல்லாஹ்விடமும் அல்லாஹ்வின் தூதரிடமும் மன்னிப்புக் கோருகிறேன். நான் என்ன குற்றம் செய்தேன்?” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘என்ன திண்டு இது?” என்று கேட்டார்கள். நான், ‘‘நீங்கள் அமர்ந்துகொள்வதற்காகவும் தலையணையாகப் பயன்படுத்திக்கொள்வ தற்காகவும்தான் இதை வாங்கினேன்” என்று சொன்னேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘இந்த உருவங்களை வரைந்தவர்கள் மறுமை நாளில் வேதனை செய்யப்படுவார்கள். அவர்களிடம், ‘நீங்கள் படைத்தவற்றுக்கு உயிர்கொடுங்கள் (பார்க்கலாம்)’ என்று சொல்லப்படும்” எனச் சொன்னார்கள். மேலும், உருவப்படங்கள் இருக்கும் வீட்டினுள் (இறைக் கருணையைக் கொண்டு வரும்) வானவர்கள் நுழையமாட்டார்கள்” என்றும் சொன்னார்கள்.138 அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Dress
- Hadith Index
- #5961
- Book Index
- 177
Grades
- -