ஹதீஸ்கள்
#5954
ஸஹீஹ் அல்-புகாரீ - Dress
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு பயணத்திருந்து (தபூக் அல்லது கைபரிலிருந்து மதீனா) வந்தார்கள். அப்போது உருவச்சித்திரங்கள் பொறித்த எனது திரைச்சீலை ஒன்றால் நான் எனது அலமாரியை மறைத்திருந்தேன். அதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பார்த்தபோது அதைக் கிழித்து விட்டு, ‘‘மறுமை நாளில் மக்களிலேயே மிகக் கடுமையான வேதனைக்குள்ளாவோர் அல்லாஹ்வின் படைப்புகளுக்கு ஒப்பாகப் படை(க்க நினை)ப்பவர்கள்தான்” என்று சொன்னார்கள். பிறகு நாங்கள் அந்தத் திரைச் சீலையை ஒரு தலையணை (இருக்கை)யாக, அல்லது இரு தலையணை (இருக்கை)களாக ஆக்கிக்கொண்டோம்.133 அத்தியாயம் :
حدثنا علي بن عبد الله، حدثنا سفيان، قال سمعت عبد الرحمن بن القاسم وما بالمدينة يوميذ افضل منه قال سمعت ابي قال سمعت عايشة رضى الله عنها قدم رسول الله صلى الله عليه وسلم من سفر وقد سترت بقرام لي على سهوة لي فيها تماثيل، فلما راه رسول الله صلى الله عليه وسلم هتكه وقال " اشد الناس عذابا يوم القيامة الذين يضاهون بخلق الله ". قالت فجعلناه وسادة او وسادتين
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Dress
- Hadith Index
- #5954
- Book Index
- 170
Grades
- -
