ஹதீஸ்கள்
#5950
ஸஹீஹ் அல்-புகாரீ - Dress
முஸ்லிம் பின் ஸுபைஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நாங்கள் மஸ்ரூக் பின் அல்அஜ்தஉ (ரஹ்) அவர்களுடன் யசார் பின் நுமைர் (ரஹ்) அவர்களது இல்லத்தில் இருந்தோம். அப்போது யசார் (ரஹ்) அவர்களின் வீட்டுத் திண்ணையில் சில சிலைகள் இருப்பதை மஸ்ரூக் (ரஹ்) அவர்கள் கண்டார்கள். உடனே ‘‘அல்லாஹ்விடம் மறுமை நாளில் மிகக் கடுமையான வேதனைக்கு உள்ளாவோர் உருவங்களைப் படைப் போர்தான்” என நபி (ஸல்) அவர்கள் கூறியதைத் தாம் செவியுற்றதாக அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூற நான் கேட்டேன் என்று மஸ்ரூக் (ரஹ்) அவர்கள் சொன்னார்கள். அத்தியாயம் :
حدثنا الحميدي، حدثنا سفيان، حدثنا الاعمش، عن مسلم، قال كنا مع مسروق في دار يسار بن نمير، فراى في صفته تماثيل فقال سمعت عبد الله قال سمعت النبي صلى الله عليه وسلم يقول " ان اشد الناس عذابا عند الله يوم القيامة المصورون
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Dress
- Hadith Index
- #5950
- Book Index
- 166
Grades
- -
