ஹதீஸ்கள்
#5884
ஸஹீஹ் அல்-புகாரீ - Dress
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் மதீனா கடைவீதிகளில் ஒன்றில் (‘பனூ கைனுகா’ கடைவீதியில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தேன். அவர்கள் (ஃபாத்திமா (ரலி) அவர்களின் வீட்டுக்குச்) செல்லவே நானும் (அவர்களுடன்) சென்றேன். (வீட்டுக்கு வந்ததும்,) ‘‘பொடியன் எங்கே?” என்று மும்முறை கேட்டார்கள். பிறகு ‘‘அலீயின் மகன் ஹசனைக் கூப்பிடுங்கள்” என்று சொன்னார்கள். அப்போது அலீ (ரலி) அவர்களுடைய புதல்வர் ஹசன் (ரலி) அவர்கள் கழுத்தில் நறுமண மாலை ஒன்றை அணிந்தவாறு நடந்து வந்தார்கள். அவர் களைக் கண்டதும் நபி (ஸல்) அவர்கள் இப்படித் தமது கையை விரித்தபடி அவரை நோக்கிச் சென்றார்கள். ஹசன் (ரலி) அவர்களும் இவ்வாறு தமது கையை விரித்தபடி (நபி (ஸல்) அவர்களை அணைத்திட) அவர்களை நோக்கி வந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் ஹசன் (ரலி) அவர்களை அணைத்துக்கொண்டு, ‘‘இறைவா! நான் இவரை நேசிக்கிறேன். நீயும் இவரையும் இவரை நேசிப்பவர் களையும் நேசிப்பாயாக” என்று பிரார்த் தனை செய்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அப்படிப் பிரார்த்தனை செய்தபிறகு அலீயின் புதல்வர் ஹசன் (ரலி) அவர் களைவிட வேறெவரும் எனக்கு அதிகப் பிரியமானவராக இருக்கவில்லை.94 அத்தியாயம் :
حدثني اسحاق بن ابراهيم الحنظلي، اخبرنا يحيى بن ادم، حدثنا ورقاء بن عمر، عن عبيد الله بن ابي يزيد، عن نافع بن جبير، عن ابي هريرة رضى الله عنه قال كنت مع رسول الله صلى الله عليه وسلم في سوق من اسواق المدينة فانصرف فانصرفت فقال " اين لكع ثلاثا ادع الحسن بن علي ". فقام الحسن بن علي يمشي وفي عنقه السخاب، فقال النبي صلى الله عليه وسلم بيده هكذا، فقال الحسن بيده، هكذا فالتزمه فقال " اللهم اني احبه، فاحبه، واحب من يحبه ". قال ابو هريرة فما كان احد احب الى من الحسن بن علي بعد ما قال رسول الله صلى الله عليه وسلم ما قال
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Dress
- Hadith Index
- #5884
- Book Index
- 101
Grades
- -
