ஹதீஸ்கள்
#5882
ஸஹீஹ் அல்-புகாரீ - Dress
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: (என்னிடமிருந்து) அஸ்மா (ரலி) அவர்களின் மாலையொன்று (பனூ முஸ்தலிக் போரிலிருந்து திரும்பும் வழியில்) தொலைந்து போய்விட்டது. நபி (ஸல்) அவர்கள் அதைத் தேடும்படி சிலரை அனுப்பிவைத்தார்கள். (தேடிச் சென்றபோது) தொழுகை நேரம் வந்து விட்டது. அவர்களிடம் அங்கத் தூய்மை (உளூ) செய்யத் தண்ணீர் இல்லை. (அந்த இடத்தில்) அவர்களுக்குத் தண்ணீர் கிடைக்கவுமில்லை. அங்கத் தூய்மை (உளூ) செய்யாமலேயே அவர்கள் தொழுதார்கள். இந்த விஷயத்தை அவர்கள் (திரும்பிவந்து) நபி (ஸல்) அவர்களிடம் சென்னார்கள். அப்போது அல்லாஹ் ‘தயம்மும்’ (செய்துகொள்ள அனுமதி வழங்கும்) வசனத்தை அருளினான். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் இப்னு நுமைர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், ‘‘அந்தக் கழுத்து மாலையை நான் (என் சகோதரி) அஸ்மாவிடமிருந்து இரவல் வாங்கியிருந்தேன்” என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள் எனக் கூடுதலாக இடம்பெற்றுள்ளது.92 அத்தியாயம் :
حدثنا اسحاق بن ابراهيم، حدثنا عبدة، حدثنا هشام بن عروة، عن ابيه، عن عايشة رضى الله عنها قالت هلكت قلادة لاسماء، فبعث النبي صلى الله عليه وسلم في طلبها رجالا، فحضرت الصلاة وليسوا على وضوء ولم يجدوا ماء، فصلوا وهم على غير وضوء، فذكروا ذلك للنبي صلى الله عليه وسلم فانزل الله اية التيمم. زاد ابن نمير عن هشام عن ابيه عن عايشة استعارت من اسماء
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Dress
- Hadith Index
- #5882
- Book Index
- 99
Grades
- -
