ஹதீஸ்கள்
#5879
ஸஹீஹ் அல்-புகாரீ - Dress
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களின் மோதிரம் (அவர்களது வாழ்நாளில்) அவர்களின் கரத்திலேயே இருந்தது. அவர்களுக்குப் பின் அபூபக்ர் (ரலி) அவர்களின் (ஆட்சிக் காலத்தில் அபூபக்ரின்) கரத்தில் இருந்தது. அபூபக்ர் (ரலி) அவர்களுக்குப்பின் உமர் (ரலி) அவர்களின் (ஆட்சிக் காலத்தில் உமரின்) கரத்தில் இருந்தது. உஸ்மான் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலம் வந்தபோது, அவர்கள் (ஒருமுறை) அரீஸ் எனும் கிணற்றின் (விளிம்பின்) மீது அமர்ந்திருந்த சமயத்தில் (ஏதோ சிந்தனையில் தம்மையறியாமல்) மோதிரத் தைக் கழற்றுவதும் அணிவதுமாக இருந்தார்கள். அப்போது அது (தவறி கிணற்றுக்குள்) விழுந்துவிட்டது. (அதைத் தேடிக் கண்டுபிடிப்பதற்காக) உஸ்மான் (ரலி) அவர்களுடன் நாங்கள் மூன்று நாட்கள் (அங்கு) போய்வந்து கொண்டிருந்தோம். பிறகு, கிணற்று நீரை இரைத்து(த் தூர்வாரி)ப் பார்த்தார்கள். அப்போதும் அது எங்களுக்குக் கிடைக்க வில்லை.90 அத்தியாயம் :
وزادني احمد حدثنا الانصاري، قال حدثني ابي، عن ثمامة، عن انس، قال كان خاتم النبي صلى الله عليه وسلم في يده، وفي يد ابي بكر بعده، وفي يد عمر بعد ابي بكر، فلما كان عثمان جلس على بير اريس قال فاخرج الخاتم، فجعل يعبث به فسقط قال فاختلفنا ثلاثة ايام مع عثمان فننزح البير فلم نجده
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Dress
- Hadith Index
- #5879
- Book Index
- 96
Grades
- -
