ஹதீஸ்கள்
#5876
ஸஹீஹ் அல்-புகாரீ - Dress
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் பொன் மோதிரம் ஒன்றைச் செய்து, அதன் குமிழைத் தமது உள்ளங்கைப் பக்கமாக வைத்து அணிந்துகொண்டார்கள். மக்களும் (அவ்வாறே) பொன் மோதிரங்களைச் செய்தனர். (இதற்கிடையில் ஒருநாள்) நபி (ஸல்) அவர்கள் சொற்பொழிவு மேடையில் (மிம்பரில்) ஏறி, அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்துவிட்டு, ‘‘நான் அதைச் செய்திருந்தேன். ஆனால், அதை நான் இனி அணியமாட்டேன்” என்று கூறிவிட்டு, அதை(க் கழற்றி) எறிந்துவிட்டார்கள். மக்களும் எறிந்துவிட்டனர்.88 (அறிவிப்பாளர்களில் ஒருவரான) ஜுவைரிய்யா (ரஹ்) அவர்கள் கூறு கிறார்கள்: அறிவிப்பாளர் நாஃபிஉ (ரஹ்) அவர்கள், ‘‘(நபி (ஸல்) அவர்கள் மோதிரத்தைத்) தமது வலக் கையில் அணிந்துகொண்டார்கள்” என்று சொன்னதாகவே நான் எண்ணுகிறேன். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Dress
- Hadith Index
- #5876
- Book Index
- 93
Grades
- -