ஹதீஸ்கள்
#5844
ஸஹீஹ் அல்-புகாரீ - Dress
உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (ஒருநாள்) இரவு (திடீரென) விழித்தெழுந்து ‘‘அல்லாஹ் வைத் தவிர வேறு இறைவனில்லை. இன்றிரவு இறக்கிவைக்கப்பட்ட சோதனை கள்தான் என்ன? (இன்றிரவு) இறக்கி வைக்கப்பட்ட கருவூலங்கள்தான் என்ன! (என் துணைவியரில்) இந்த அறைகளில் (உறங்கிக்கொண்டு) உள்ளோரை எழுப்பி உணர்வூட்டுகின்றவர் யார்? இவ்வுலகில் ஆடை அணிந்திருக்கும் எத்து ணையோ பெண்கள், மறுமை நாளில் (துணியே கிடைக்காமல்) நிர்வாணமாய் இருப்பார்கள்” என்று கூறினார்கள்.62 இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (எனக்கு இந்த ஹதீஸை அறிவித்த) ஹின்த் பின்த் அல்ஹாரிஸ் (ரஹ்) அவர்களின் சட்டைக்கைகளில் (அவை விசாலமானவையாக இருந்ததால் கை வெளியே தெரிந்துவிடுமோ என அஞ்சி) தம் விரல்களுக்கிடையே பொத்தான்கள் வைத்திருப்பார்கள். அத்தியாயம் :
حدثنا عبد الله بن محمد، حدثنا هشام، اخبرنا معمر، عن الزهري، اخبرتني هند بنت الحارث، عن ام سلمة، قالت استيقظ النبي صلى الله عليه وسلم من الليل وهو يقول " لا اله الا الله، ماذا انزل الليلة من الفتنة، ماذا انزل من الخزاين، من يوقظ صواحب الحجرات، كم من كاسية في الدنيا عارية يوم القيامة ". قال الزهري وكانت هند لها ازرار في كميها بين اصابعها
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Dress
- Hadith Index
- #5844
- Book Index
- 61
Grades
- -
