ஹதீஸ்கள்
#5798
ஸஹீஹ் அல்-புகாரீ - Dress
முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (ஒரு பயணத்தின் போது) தமது இயற்கைத் தேவையை நிறைவேற்றச் சென்றுவிட்டுத் திரும்பி வந்தார்கள். நான் தண்ணீருடன் அவர் களை எதிர்கொண்டேன். பிறகு அங்கத் தூய்மை (உளூ) செய்தார்கள். அப்போது அவர்கள் ஷாம் நாட்டு நீளங்கி (ஜுப்பா) அணிந்திருந்தார்கள். அப்போது அவர்கள் வாய்கொப்பு ளித்து நாசிக்குத் தண்ணீர் செலுத்தி விட்டுத் தமது முகத்தைக் கழுவினார்கள். பின்னர் தம் இரு கைகளையும் சட்டைக் கைகளிலிருந்து வெளியே எடுக்கப் போனார்கள். ஆனால், சட்டைக்கைகள் குறுகலாக இருந்தன. ஆகவே, தம் இரு கைகளையும் அவர்கள் நீளங்கியின் கீழிருந்து வெளியே எடுத்து அவற்றைக் கழுவிக்கொண்டார்கள். மேலும், தலையை (ஈரக் கையால் ‘மஸ்ஹ்’ செய்து) தடவிக்கொண்டார்கள். (‘மோஸா’ எனும்) காலுறையையும் (ஈரக் கையால்) தடவிக்கொண்டார்கள்.17 அத்தியாயம் :
حدثنا قيس بن حفص، حدثنا عبد الواحد، حدثنا الاعمش، قال حدثني ابو الضحى، قال حدثني مسروق، قال حدثني المغيرة بن شعبة، قال انطلق النبي صلى الله عليه وسلم لحاجته ثم اقبل، فتلقيته بماء، فتوضا وعليه جبة شامية، فمضمض واستنشق وغسل وجهه، فذهب يخرج يديه من كميه فكانا ضيقين، فاخرج يديه من تحت الجبة، فغسلهما ومسح براسه وعلى خفيه
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Dress
- Hadith Index
- #5798
- Book Index
- 16
Grades
- -
