ஹதீஸ்கள்
#5794
ஸஹீஹ் அல்-புகாரீ - Dress
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: ‘‘அல்லாஹ்வின் தூதரே! இஹ்ராம் கட்டியவர் எந்த ஆடையை அணிய வேண்டும்?” என்று ஒரு மனிதர் கேட்டார். நபி (ஸல்) அவர்கள், ‘‘இஹ்ராம் கட்டியவர் (முழுநீளச்) சட்டை அணியமாட்டார்; முழுக்கால் சட்டை அணியமாட்டார்; முக்காடுள்ள மேலங்கியும் அணியமாட்டார். காலுறைகளும் (மோஸாக்களும்) அணியமாட்டார். அவருக்குக் காலணிகள் கிடைக்காவிட்டால் அவர் காலுறை (மோஸாக்)களைக் கணுக்கால்களுக்குக் கீழே இருக்கும்படி அணிந்துகொள்ளட்டும்” என்று பதிலளித்தார்கள்.13 அத்தியாயம் :
حدثنا قتيبة، حدثنا حماد، عن ايوب، عن نافع، عن ابن عمر رضى الله عنهما ان رجلا، قال يا رسول الله ما يلبس المحرم من الثياب فقال النبي صلى الله عليه وسلم " لا يلبس المحرم القميص، ولا السراويل، ولا البرنس، ولا الخفين، الا ان لا يجد النعلين، فليلبس ما هو اسفل من الكعبين
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Dress
- Hadith Index
- #5794
- Book Index
- 12
Grades
- -
