ஹதீஸ்கள்
#5763
ஸஹீஹ் அல்-புகாரீ - Medicine
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு ‘பனூஸுரைக்’ குலத்தைச் சேர்ந்த லபீத் பின் அஃஸம் என்பான் சூனியம் செய்தான். இதையடுத்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தாம் செய்திராத ஒன்றைத் தாம் செய்துகொண்டிருந்ததாகப் பிரமையூட்டப்பட்டார்கள். இறுதியில், அவர்கள் ‘ஒரு நாள்’ அல்லது ‘ஓரிரவு’ என்னிடம் வந்தார்கள். ஆயினும், அவர்கள் (என்மீது கவனம் செலுத்தாமல்) தொடர்ந்து பிரார்த்தனை செய்துகொண்டேயிருந்தார்கள். பிறகு (என்னிடம் கூறினார்கள்:) ஆயிஷா! (விஷயம்) தெரியுமா? எந்த(ச் சூனியம்) விஷயத்தில் தெளிவைத் தரும்படி இறைவனிடம் நான் கேட்டுக்கொண்டிருந்தேனோ அந்த விஷயத்தில் அவன் எனக்குத் தெளிவை அளித்துவிட்டான். (கனவில்) என்னிடம் (வானவர்கள்) இரண்டு பேர் வந்தனர். அவ்விருவரில் ஒருவர் என் தலைமாட்டிலும் இன்னொருவர் என் கால்மாட்டிலும் அமர்ந்துகொண்டனர். அவ்விருவரில் ஒருவர் தம் தோழரிடம், ‘‘இந்த மனிதரின் நோய் என்ன?” என்று கேட்டார். அத்தோழர், ‘‘இவருக்குச் சூனியம் வைக்கப்பட்டுள்ளது” என்று சொல்ல, முதலாமவர் ‘‘இவருக்குச் சூனியம் வைத்தவர் யார்?” என்று கேட்டார். தோழர், ‘‘லபீத் பின் அஃஸம் (எனும் யூதன்)” என்று பதிலளித்தார். அவர், ‘‘எதில் வைத்திருக்கிறான்?” என்று கேட்க, சீப்பிலும், சிக்குமுடியிலும், ஆண் பேரீச்சம்பாளையின் உறையிலும்” என்று பதிலளித்தார். அவர், ‘‘அது எங்கே இருக்கிறது?” என்று கேட்க, மற்றவர், ‘‘(பனூ ஸுரைக் குலத்தாரின் தோட்டத்திலுள்ள) ‘தர்வான்’ எனும் கிணற்றில்” என்று பதிலளித்தார். இதைச் சொல்லி முடித்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் தோழர்கள் சிலருடன் அந்தக் கிணற்றுக்குச் சென்று (பாளைஉறையை வெளியே எடுத்து விட்டுத் திரும்பி) வந்து, ‘‘ஆயிஷா! அதன் தண்ணீர் மருதாணிச் சாற்றைப் போன்று உள்ளது; அதன் பேரீச்சமரங்களின் தலைகள் ஷைத்தானின் தலைகளைப் போன்று உள்ளன” என்று சொன்னார்கள். நான், ‘‘அல்லாஹ்வின் தூதரே! அ(ந்தப் பாளைஉறைக்குள் இருப்ப)தைத் தாங்கள் வெளியே எடுக்கவில்லையா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘அல்லாஹ் எனக்கு (அதன் பாதிப்பிலிருந்து) குணமளித்துக் காப்பாற்றிவிட்டான். அதை வெளியே எடுப்பதன் மூலம் மக்களிடையே (சூனியக்கலை பரவக் காரணமாகி) குழப்பத்தைக் கிளப்பிவிடுவதை நான் வெறுத்தேன் (எனவேதான், அதை நான் வெளியே எடுக்கவில்லை)” என்று சொன்னார்கள். பிறகு அந்தக் கிணற்றைத் தூர்த்துவிடும்படி அவர்கள் கட்டளையிட அவ்வாறே அது தூர்க்கப்பட்டது.89 இந்த ஹதீஸ் ஆறு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அறிவிப்பாளர் ஹிஷாம் பின் உர்வா (ரஹ்) அவர்களின் ஓர் அறிவிப்பில், (சீப்பிலும் சிக்குமுடியிலும் என்பதற்குப் பதிலாக) ‘சீப்பிலும் சணல் நாரிலும்’ என்று காணப்படுகிறது. தலையை வாரும்போது கழியும் முடிக்கே ‘முஷாதத்’ (சிக்குமுடி) எனப்படும். சணலை நூற்கும்போது வெளிவரும் நாருக்கே ‘முஷாகத்’ (சணல் நார்) எனப்படும். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Medicine
- Hadith Index
- #5763
- Book Index
- 77
Grades
- -