ஹதீஸ்கள்
#5747
ஸஹீஹ் அல்-புகாரீ - Medicine
அபூசலமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ‘‘(நல்ல) கனவு அல்லாஹ்விடமிருந்து வருவதாகும். (கெட்ட) கனவு ஷைத்தானிட மிருந்து வருவதாகும். ஆகவே, நீங்கள் வெறுக்கின்ற ஒரு விஷயத்தைக் (கனவில்) கண்டால் கண் விழிக்கும்போது மூன்று முறை (இடப் பக்கமாகத்) துப்பி, அதன் தீங்கிலிருந்து (அல்லாஹ்விடம்) பாதுகாப்புக் கோரினால், அது அவருக்கு தீங்கிழைக்காது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூகத்தாதா (ரலி) அவர்கள் சொல்ல நான் செவியுற்றேன். இந்த ஹதீஸை நான் கேட்(டு அறிந்துவிட்)ட காரணத்தால் மலையை விடச் சுமையான ஒரு கனவை நான் கண்டாலும்கூட அதைப் பொருட்படுத்துவ தில்லை. அத்தியாயம் :
حدثنا خالد بن مخلد، حدثنا سليمان، عن يحيى بن سعيد، قال سمعت ابا سلمة، قال سمعت ابا قتادة، يقول سمعت النبي صلى الله عليه وسلم يقول " الرويا من الله، والحلم من الشيطان، فاذا راى احدكم شييا يكرهه فلينفث حين يستيقظ ثلاث مرات ويتعوذ من شرها، فانها لا تضره ". وقال ابو سلمة وان كنت لارى الرويا اثقل على من الجبل، فما هو الا ان سمعت هذا الحديث فما اباليها
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Medicine
- Hadith Index
- #5747
- Book Index
- 62
Grades
- -
