ஹதீஸ்கள்
#5742
ஸஹீஹ் அல்-புகாரீ - Medicine
அப்துல் அஸீஸ் பின் ஸுஹைப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நானும் ஸாபித் பின் அஸ்லம் அல்புனானீ (ரஹ்) அவர்களும் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடம் சென்றோம். ஸாபித் (ரஹ்) அவர்கள் ‘‘அபூஹம்ஸாவே! நான் நோய்வாய்ப்பட்டுள்ளேன்” என்று சொல்ல, அனஸ் (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எதனால் ஓதிப்பார்த்தார்களோ அதனால் உங்களுக்கும் நான் ஓதிப்பார்க்கட்டுமா?” என்று கேட்டார்கள். ஸாபித் (ரஹ்), ‘‘சரி (அவ்வாறே ஓதிப்பாருங்கள்)” என்று சொல்ல, அனஸ் (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹும்ம ரப்பந்நாஸ்! முத்ஹிபல் பஃஸி, இஷ்ஃபி அன்த்தஷ் ஷாஃபீ, லா ஷாஃபிய இல்லா அன்த்த, ஷிஃபாஅன் லா யுஃகாதிரு சகமன்’ என்று கூறி ஓதிப்பார்த்தார்கள். (பொருள்: இறைவா! மக்களை இரட்சிப்ப வனே! துன்பத்தைப் போக்குபவனே! குணமளிப்பாயாக! நீயே குணமளிப்பவன். உன்னைத் தவிர குணமளிப்பவர் வேறு எவருமில்லை. அறவே நோய் இல்லாதவாறு குணமளிப்பாயாக.) அத்தியாயம் :
حدثنا مسدد، حدثنا عبد الوارث، عن عبد العزيز، قال دخلت انا وثابت، على انس بن مالك فقال ثابت يا ابا حمزة اشتكيت. فقال انس الا ارقيك برقية رسول الله صلى الله عليه وسلم قال بلى. قال " اللهم رب الناس مذهب الباس اشف انت الشافي لا شافي الا انت، شفاء لا يغادر سقما
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Medicine
- Hadith Index
- #5742
- Book Index
- 57
Grades
- -
