ஹதீஸ்கள்
#5717
ஸஹீஹ் அல்-புகாரீ - Medicine
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘தொற்று நோய் கிடையாது. ‘ஸஃபர்’ தொற்று நோயன்று; ஆந்தையால் சகுனம் பார்ப்பதும் கிடையாது” என்று சொன்னார்கள். அப்போது கிராமவாசியொருவர், ‘‘அல்லாஹ்வின் தூதரே! (பாலை)மணல் மான்களைப் போன்று (ஆரோக்கியத்துடன் துள்ளித் திரியும்) என் ஒட்டகங்களி டம் சிரங்கு பிடித்த ஒட்டகம் வந்து அவற்றுக்கிடையே கலந்து அவற்றையும் சிரங்கு பிடித்தவையாக ஆக்கிவிடுகின்ற னவே! அவற்றின் நிலையென்ன (தொற்று நோயில்லையா)?” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘அப்படியென்றால் முதல் (முதல் சிரங்கு பிடித்த) ஒட்டகத்திற்கு (அந்த நோயைத்) தொற்றச்செய்தது யார்?” என்று திருப்பிக் கேட்டார்கள்.47 அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Medicine
- Hadith Index
- #5717
- Book Index
- 34
Grades
- -