ஹதீஸ்கள்
#5713
ஸஹீஹ் அல்-புகாரீ - Medicine
உம்மு கைஸ் பின்த் மிஹ்ஸன் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் என்னுடைய ஆண் குழந்தையை அழைத்துச் சென்றேன். (அவனுக்கு ஏற்பட்டிருந்த) அடிநாக்கு அழற்சியைப் போக்க (அக்கால முறைப்படி) தொண்டையில் திரியைத் திணித்து விரலால் அழுத்தியிருந்தேன்.39 (இதைக் கண்ணுற்ற) நபி (ஸல்) அவர்கள், ‘‘இந்தச் சிகிச்சை முறையால் உங்கள் குழந்தைகளை (அடிநாக்கைக் குத்தி) ஏன் துன்புறுத்துகிறீர்கள்? இந்த இந்திய (கோஷ்ட)க் குச்சியை அவசியம் பயன்படுத்துங்கள். அதில் ஏழு (நோய்களுக்கு) நிவாரணங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று (மார்புத்தசை வாதத்தால் ஏற்படும்) விலா வலியாகும். அடிநாக்கு அழற்சிக்காக அதை(த் தூளாக்கி எண்ணெயில் குழைத்து) மூக்கில் சொட்டு மருந்தாக இடப்படும். விலா வலிக்காக அதை வாயின் ஒரு பக்கத்தில் சொட்டு மருந்தாகக் கொடுக்கப்படும்” என்று கூறினார்கள்.40 அறிவிப்பாளர் சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் (ஏழில்) இரண்டை (மட்டும்) நமக்கு விவரித்தார்கள். (மீதி) ஐந்தை விவரிக்கவில்லை” என ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூற நான் கேட்டேன்.41 அறிவிப்பாளர் அலீ பின் மதீனீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: சுஃப்யான் (ரஹ்) அவர்கள், குழந்தை யின் அண்ணத்தை விரலால் அழுத்துவது குறித்து விவரிக்கையில், தமது விரலை மேல்வாயின் உட்புறத்தில் நுழைத்து அழுத்திக் காட்டினார்கள். (இதுதான் நோக்கமே தவிர, மூலத்தில் ‘இஃலாக்’ எனும் சொல் இடம்பெற்றிருப்பதற்காகத்) தொண்டையில் எதையும் மாட்டுவது நோக்கமாகாது. அத்தியாயம் :
حدثنا علي بن عبد الله، حدثنا سفيان، عن الزهري، اخبرني عبيد الله، عن ام قيس، قالت دخلت بابن لي على رسول الله صلى الله عليه وسلم وقد اعلقت عليه من العذرة فقال " على ما تدغرن اولادكن بهذا العلاق عليكن بهذا العود الهندي، فان فيه سبعة اشفية، منها ذات الجنب يسعط من العذرة، ويلد من ذات الجنب ". فسمعت الزهري يقول بين لنا اثنين ولم يبين لنا خمسة. قلت لسفيان فان معمرا يقول اعلقت عليه. قال لم يحفظ اعلقت عنه، حفظته من في الزهري. ووصف سفيان الغلام يحنك بالاصبع وادخل سفيان في حنكه، انما يعني رفع حنكه باصبعه، ولم يقل اعلقوا عنه شييا
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Medicine
- Hadith Index
- #5713
- Book Index
- 30
Grades
- -
