ஹதீஸ்கள்
#5703
ஸஹீஹ் அல்-புகாரீ - Medicine
கஅப் பின் உஜ்ரா (ரலி) அவர்கள் கூறியதாவது: ஹுதைபியா நிகழ்ச்சியின்போது நபி (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். அப்போது நான் அடுப்பின் கீழே தீ மூட்டிக்கொண்டிருந்தேன். பேன்கள் என் தலையிலிருந்து உதிர்ந்துகொண்டிருந்தன. நபி (ஸல்) அவர்கள் (என்னிடம்), ‘‘உங்கள் (தலையிலுள்ள) பேன்கள் உங்களைத் தொந்தரவு செய்கின்றனவா?” என்று கேட்டார்கள். நான், ‘‘ஆம்” என்று சொன்னேன். நபி (ஸல்) அவர்கள், ‘‘அப்படியென்றால் தலையை மழித்துக்கொண்டு (இஹ்ராமின் விதியை மீறியதற்குப் பரிகாரமாக) மூன்று நாட்கள் நோன்பு நோறுங்கள்; அல்லது ஆறு பேருக்கு உணவளியுங்கள்; அல்லது ஒரு தியாகப் பிராணியை அறுத்து (குர்பானி) கொடுங்கள்” என்றார்கள்.25 (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) அய்யூப் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: ‘‘இவற்றில் எதை முதல் குறிப்பிட்டார்கள்” என்பது எனக்குத் தெரியவில்லை. அத்தியாயம் :
حدثنا مسدد، حدثنا حماد، عن ايوب، قال سمعت مجاهدا، عن ابن ابي ليلى، عن كعب، هو ابن عجرة قال اتى على النبي صلى الله عليه وسلم زمن الحديبية، وانا اوقد تحت برمة، والقمل يتناثر عن راسي فقال " ايوذيك هوامك ". قلت نعم. قال " فاحلق وصم ثلاثة ايام، او اطعم ستة، او انسك نسيكة ". قال ايوب لا ادري بايتهن بدا
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Medicine
- Hadith Index
- #5703
- Book Index
- 23
Grades
- -
