ஹதீஸ்கள்
#5687
ஸஹீஹ் அல்-புகாரீ - Medicine
காலித் பின் சஅத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: எங்களுடன் ஃகாலிப் பின் அப்ஜர் (ரலி) அவர்கள் இருக்க நாங்கள் (பயணம்) புறப்பட்டோம். வழியில் ஃகாப் (ரலி) அவர்கள் நோய்வாய்ப்பட்டார்கள். அவர்கள் நோயாளியாக இருக்கும் நிலையிலேயே மதீனாவுக்குச் சென்றோம். ஃகாலிப் (ரலி) அவர்களை இப்னு அபீஅ(த்)தீக் (ரலி) அவர்கள் உடல்நலம் விசாரிக்க வந்தார்கள். அப்போது அவர்கள் எங்களிடம் (பின்வருமாறு) கூறினார்கள்: இந்தச் சின்னஞ்சிறு கறுப்பு வித்தை (கருஞ் சீரகத்தை) நீங்கள் பயன்படுத்துங்கள். இதிலிருந்து ஐந்தாறு வித்துகளை எடுத்துத் தூளாக்கி (எண்ணெய் பிழிந்து) அவரு டைய மூக்கில் இந்தப் பக்கத்திலும் அந்தப் பக்கத்திலும் (அதன்) எண்ணெய்ச் சொட்டுகளை விடுங்கள். ஏனெனில், ஆயிஷா (ரலி) அவர்கள் என்னிடம், ‘‘நபி (ஸல்) அவர்கள் இந்தக் கருஞ்சீரகம் எல்லா நோய்க்கும் நிவாரண மாகும்; ‘சாமை’த் தவிர என்று கூறியதை நான் கேட்டிருக்கிறேன்” எனத் தெரிவித்தார்கள். நான், ‘‘சாம் என்றால் என்ன?” என்று அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் ‘மரணம்’ என்று பதிலளித் தார்கள். அத்தியாயம் :
حدثنا عبد الله بن ابي شيبة، حدثنا عبيد الله، حدثنا اسراييل، عن منصور، عن خالد بن سعد، قال خرجنا ومعنا غالب بن ابجر فمرض في الطريق، فقدمنا المدينة وهو مريض، فعاده ابن ابي عتيق فقال لنا عليكم بهذه الحبيبة السوداء، فخذوا منها خمسا او سبعا فاسحقوها، ثم اقطروها في انفه بقطرات زيت في هذا الجانب وفي هذا الجانب، فان عايشة حدثتني انها سمعت النبي صلى الله عليه وسلم يقول " ان هذه الحبة السوداء شفاء من كل داء الا من السام ". قلت وما السام قال الموت
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Medicine
- Hadith Index
- #5687
- Book Index
- 10
Grades
- -
