ஹதீஸ்கள்
#5668
ஸஹீஹ் அல்-புகாரீ - Patients
சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: ‘விடைபெறும்’ ஹஜ்ஜின்போது மிகக் கடுமையாக நோயுற்றிருந்த என்னை உடல் நலம் விசாரிப்பதற்காக அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்தார்கள். அப்போது நான், ‘‘(இதோ) தாங்கள் காண்கிறீர்களே இந்த நோய் என்னைப் பீடித்துவிட்டது. நான் ஒரு செல்வந்தன். (நான் இறந்துவிட்டால்) என் ஒரே மகள் தவிர வேறெவரும் என(து சொத்து)க்கு வாரிசாகமாட்டார்கள். எனவே எனது செல்வத்தில் மூன்றில் இரண்டு பங்கை தானம் செய்துவிடட்டுமா?” என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், ‘‘வேண்டாம்” என்று கூறினார்கள். நான், ‘‘(எனது செல்வத்தில்) பாதி யை(யாவது தானம் செய்யட்டுமா)?” என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள் (அப்போதும்) வேண்டாம் என்று சொன்னார்கள். நான் மூன்றில் ஒரு பங்கை(யாவது தானம் செய்துவிடட்டுமா)?” என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், ‘‘(மூன்றில் ஒரு பங்கா?) மூன்றில் ஒரு பங்கே அதிகம்தான். நீங்கள் உங்கள் வாரிசுகளைத் தன்னிறைவுடையவர்களாக விட்டுச் செல்வது, மக்களிடம் கையேந்தும் ஏழைகளாக அவர்களை விட்டுச்செல்வதைவிடச் சிறந்ததாகும். நீங்கள் இறைவனின் அன்பை நாடிச் செய்யும் (தானதர்மம், குடும்பச்) செலவு எதுவாயினும் அதற்காக உங்களுக்கு நற்பலன் அளிக்கப்படாமல் இருப்பதில்லை. அது நீங்கள் உங்கள் மனைவியின் வாயில் ஊட்டும் (ஒரு கவளம்) உணவாயினும் சரியே (அதற்கும் நற்பலன் உண்டு)” என்று சொன்னார்கள்.25 அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Patients
- Hadith Index
- #5668
- Book Index
- 28
Grades
- -